திருச்சிராப்பள்ளி, ஜூலை 28-
கடந்த சில மாதங்களாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு பிரிவு மக்களின் மீது வன்முறை வெறியாட்டம் நடத்தப் பட்டு வருகிறது. பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக பெண் கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ள னர். இந்த கொடுஞ்செயலை கண்டித் தும், ஒன்றிய-மாநில பாஜக அரசுகளை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
சிஐடியுவின் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் வெள்ளியன்று ஏர் போர்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிபிஎம் பகுதிச் செயலாளர் விஜ யேந்திரன், மற்றும் பல்வேறு சங்கங்க ளின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகி கள் பேசினர்.
அந்தநல்லூர் ஒன்றியக்குழு சார்பில் ஜீயபுரம் கடைவீதியில் ஒன்றியச் செய லாளர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் மாரி யப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கம், மாதர் சங்கம் மற்றும் சிஐடியு மணப்பாறை வட்டக்குழு சார்பில் மணப்பாறை பேருந்து நிலையம் அரு கில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத் திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித் தார். சிஐடியு புறநகர் மாவட்ட செயலா ளர் சிவராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சிதம்பரம், சிபிஎம் வட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், சிஐடியு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், விவ சாய தொழிலாளர் சங்க வட்ட செயலா ளர் கண்ணன், ஆட்டோ சங்க புறநகர் மாவட்ட தலைவர் நவமணி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
திருவாரூர்
கலவர பூமியாக மாறிய மணிப் பூரை பற்றி கவலைப்படாத பிரதமரை கண்டித்தும், மணிப்பூர் பாஜக முதல்வர் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் ஒன்றிய குழு-நகர குழு சார்பில் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் புலிவலம் கடைத்தெரு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக் குழு உறுப்பினர் என்.இடும்பையன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.
திருவாரூர் ரயில் நிலையம் அருகே சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பத்திரிகையாளர் எஸ்.நவமணி தலைமை வகித்தார். திமுக நகரச் செய லாளர் வாரை.பிரகாஷ், மக்கள் அதிகார மாவட்ட பொறுப்பாளர் ஆசாத், சிபிஎம் நகர செயலாளர் தர்மலிங்கம், திரா விடர் கழக மாவட்டத் தலைவர் மோகன், தொழிற்சங்க தலைவர் அழகிரி, இந்திய மாணவ சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் பல்வேறு அமைப்பு களின் பிரதிநிதிகள் கண்டன உரை யாற்றினர். தொழிற்சங்க தலைவர் ஆர்.சக்திவேல் நிறைவுரையாற்றினார்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவில் கடைவீதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் மூத்த நிர்வாகி பண்ணை சொக்கலிங்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மயிலாடு துறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தொடங்கி வைத்தார்.