districts

img

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை/மயிலாடுதுறை, அக்.22 - பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலைக் கண்டித்தும், இந்திய ஒன்றிய அரசு  பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பக்கம் நிற்க வலியு றுத்தியும் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இணைந்து  நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்டத் தலை வர் ராசி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். காங்கி ரஸ் கட்சியின் சார்பில் கே.கே.பாருக், விசிக மாவட்டச் செயலாளர் இளமதி அசோகன், முஸ்லீம் லீக் மாவட்டத் தலைவர் அஸ்ரப் அலி, மக்கள் ஒற்றுமை மேடை  சார்பில் எஸ்.ஆரோக்கியசாமி, மனிதநேய மக்கள் கட்சி  சார்பில் அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்த  னர். கோரிக்கைகளை விளக்கி தமுஎகச மாவட்டச் செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ, ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் மு.முத்தையா, அறிவியல் இயக்கம் சார்பில் அ.மணவாளன், விதொச மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், மாணவர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ்.ஜனார்த்தனன், வாலிபர் சங்க மாவட்டத்  தலைவர் எம்.மகாதீர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டப் பொருளாளர் கவிபாலா, சிபிஎம் நகரச்  செயலாளர் ஆர்.சோலையப்பன், மாதர் சங்க மாவட்டத்  தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் கண்டன  உரையாற்றினர். மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் எம்.அசோகன் ஒருங்கிணைத்தார். முன்னதாக எம்.ஏ.ரகுமான் வரவேற்க, கி.ஜெயபாலன் நன்றி கூறினார். சிறுபான்மை மக்கள்  நலக்குழு ஆர்ப்பாட்டம் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூரப் போர் தாக்குதல்களை கண்டித்து, தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில் சனிக்கிழமை மயி லாடுதுறை மாவட்டம் ஆக்கூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவர் செ.ஜான்சன் தலைமை வகித்தார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி. சிம்சன், அமைப்பின் மாவட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், மாவட்டப் பொருளாளர் ஆசிக் ரஹ்மான், வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் அய்யப்பன் மற்றும்  அமைப்பின் நிர்வாகிகள், மாவட்டக் குழு உறுப்பி னர்கள், ஆக்கூர் ஜமாத் நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் கண்டன உரையாற்றினர்.