districts

திருச்சி முக்கிய செய்திகள்

இஸ்ரேலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, அக்.15 - இஸ்ரேல் நாட்டின் அராஜகத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே தவ்ஹீத் ஜமாஅத் சார் பாக மாவட்டத் தலைவர்  குலாம் பாட்சா தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட பொரு ளாளர் சித்தீக் ரஹ்மான், துணைத் தலைவர் ரபீக் ராஜா, துணைச் செய லாளர்கள் உள்ளிட்ட பலர் பயங்கரவாத இஸ்ரே லுக்கு எதிராக முழக் கங்களை எழுப்பினர். மாவட்டச் செயலாளர் முகமது மீரான் நன்றி கூறினார்.

கண் சிகிச்சை முகாம்

பாபநாசம், அக்.15 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த  கபிஸ்தலம் மேம்படுத்தப் பட்ட அரசு ஆரம்பச் சுகா தார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் தீபக் முன்னிலையில் நடந்த முகாமில், கபிஸ் தலம் கண் மருத்துவ உதவியாளர் ரெங்கராஜ், பரிசோதனை மேற் கொண்டார். இதில் கண் புரை முற்றிய நிலையில் இருந்த 17 பேர், அறுவை  சிகிச்சைக்காக தஞ்சா வூர் இராசா மிராசுதார் மண்டல கண் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கூட்டுறவு நகர  வங்கி பேரவை

பாபநாசம், அக்.15 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கூட்டுறவு நகர  வங்கியின் 108-வது பேரவை பாபநாசத்தில் நடைபெற்றது. செய லாட்சியர் மங்கை தலைமை வகித்தார். முன் னாள் தலைவர் சபேசன் வரவேற்றார். பொது மேலாளர் தியாகராஜன் ஆண்டு வரவு-செலவு கணக்கினை வாசித்தார்.  தேசிய நல்லாசிரியர் கலைச்செல்வன், ஓய்வு கருவூல அதிகாரி அன்ப ழகன் உள்ளிட்ட பலர் பேசி னர். மேலாளர் ஆனந்தி நன்றி கூறினார்.

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்று  அரசுப் பள்ளி மாணவிகள் சாதனை

அறந்தாங்கி, அக்.15- புதுக்கோட்டை வருவாய் மாவட்ட அளவி லான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டியில் கட்டுமாவடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெற்று சாதனை  புரிந்துள்ளனர். மாவட்ட அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி கள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றன. இதில் 19 வயதுக்குட்பட்டோருக்கான 400 மீ  ஈட்டி எறிதல் போட்டியில், கட்டுமாவடி அரசு  மேல்நிலைப்பள்ளி மாணவி பாவனாஸ்ரீ தங்கப் பதக்கமும், 200 மீ போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்றார். 14 வயதுக் குட்பட்ட 80 மீ தடை ஓட்டத்தில் கட்டு மாவடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி சுதர்ஷிகா வெள்ளிப் பதக்கம் பெற்றார். இவர்கள் இருவரும் செங்கல்பட்டில் நடைபெற உள்ள மாநில அளவிலான விளை யாட்டுப் போட்டியில் பங்கேற்க தகுதி  பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவி களை, பள்ளி தலைமை ஆசிரியை கேத்தரின்,  உடற்கல்வி ஆசிரியர் நல்லகுமார் உட்பட அனைவரும் பாராட்டினர்.

மயிலாடுதுறை - காரைக்குடி வழித்தடத்தில் பண்டிகை கால சிறப்பு ரயில் இயக்கப்படுமா?

தஞ்சாவூர், அக்.15-  மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி ரயில் பாதையில் பண்டிகை கால சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அக்டோபர் 23, 24 தேதிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வருகின்றன. அக்.22 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, தில்லைவிளாகம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, காரைக்குடி, இராமேஸ்வரம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் சொந்த ஊருக்கு வந்து திரும்புவர். இதனால் பயண நெரிசலை குறைக்க தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அதுபோல, தென்னக ரயில்வே சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் இருந்து அக்.21 அன்று (சனிக்கிழமை) இரவு மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக இராமேஸ்வரம் மற்றும் திருநெல்வேலி, மதுரை பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். மீண்டும் இப்பகுதியில் இருந்து மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக சென்னைக்கு திரும்பி வர அக்.24 (செவ்வாய்) அன்று இரவு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். நவ.12 அன்று தீபாவளி பண்டிகை வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு நவ.10 முதல் தீபாவளி வரை சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வர, இராமேஸ்வரம், திருநெல்வேலி, மதுரை பகுதிகளுக்கும், மீண்டும் சென்னைக்கு திரும்ப, மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் நடைபெறும் தைப்பூச விழாவிற்கு, ஆண்டுதோறும் அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவில் பயணம் செய்கின்றனர். மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்தபோது, தைப்பூச திருவிழா அன்று, பட்டுக்கோட்டையில் இருந்து மேல் மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு, இதுகுறித்து ஆண்டுதோறும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளும் மேல்மருவத்தூருக்கு ரயில்களை இயக்க பரிந்துரை செய்கின்றனர். ஆனால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவில்லை. இதேபோல், பொங்கல் பண்டிகைக்கும் மேற்கண்ட தடத்தின் வழியாக சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், பக்தர்கள், வர்த்தகர்கள், அலுவலர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை வைத்துள்ளனர். 

 

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் தஞ்சையில் ஆய்வு

தஞ்சாவூர், அக்.15 - தஞ்சாவூரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் முனைவர் பொ.சங்கர், வீட்டு  வசதி திட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளை  நேரில் பார்வையிட்டு சனிக்கிழமை ஆய்வு செய்தார். தஞ்சாவூர் அருகே வல்லம் அய்யனார் கோவில் பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் சார்பில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 384  குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந் துள்ளன. இதை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் முனைவர் பொ.சங்கர் நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேலும் வல்லம் அய்யனார் கோவில் பகுதியில் இரண்டா வது (2) திட்டம் பகுதியில் 969 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு, பணி களை தரமானதாகவும் குறித்த காலத்திற்குள்ளும் முடிக்கு மாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு  அறிவுறுத்தினார்.  ஆய்வின்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் டி.இளம்பரிதி, உதவி செயற் பொறியாளர் யோகேஸ்வரன், உதவிப் பொறியாளர் கார்த்திக் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 

தளவாய் மணல் குவாரியில்  அமலாக்கத் துறை ஆய்வு

அரியலூர், அக்.15 - செந்துறையை அடுத்த தளவாய் அருகேயுள்ள அரசு  மணல் குவாரியில் அமலாக்கத் துறையினர் ஞாயிற்றுக் கிழமை ஆய்வு செய்தனர். அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த தளவாய் பகுதிக்குட்பட்ட சிலுப்பனூர், சேந்தமங்கலம் கிராமம்  வெள்ளாற்றிலுள்ள மணல் குவாரியில் மத்திய காவல் படை யினர் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அலுவலர்கள் ஞாயிறன்று சோதனை மேற்கொண்டனர்.  இங்கு அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக அளவில்  மணல் எடுக்கப்பட்டுள்ளதா, முறைகேடுகள் ஏதேனும் நடை பெற்றதா என்பதை ட்ரோனை மூலம் சோதனை செய்தனர். மணல் குவாரியின் ஆழம், அகலம் உள்ளிட்டவற்றையும் அளவீடு செய்து, ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை கோ-ஆப்டெக்சில் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.14 கோடி

தஞ்சாவூர், அக்.15-  கோ-ஆப்டெக்ஸின் தஞ்சாவூர் மண்டல விற்பனை நிலையங்களில் தீபாவளி விற்பனை  இலக்கு ரூ.14 கோடி என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் நிறுவ னம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையா ளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையின் போது தமிழக அரசு வழங்கும் 30 விழுக்காடு சிறப்புத்  தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகிறது. இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென் பட்டு சேலைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுச் சேலைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறை நாடு சேலைகள், தமிழகத்தின் பல்வேறு  பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத் தில் உருவான பருத்தி சேலைகள், லினன் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்பு கள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள்  ஏராளமாக உள்ளன. தஞ்சாவூர் மண்டல கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ.7 கோடிக்கு  விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு தீபா வளிக்கு ரூ.14 கோடிக்கு விற்பனை இலக்கு  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்  என்ற சேமிப்பு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை  வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு,  12 ஆவது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30 விழுக்காடு அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

சாலை, தெரு விளக்குகள் அமைத்துத் தருக!
ஒன்றியக் குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

மயிலாடுதுறை, அக்.14 - மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோயில் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரண கூட்டம்   ஒன்றியக்குழு தலை வர் நந்தினி ஸ்ரீதர் தலைமையில் நடை பெற்றது.  ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார மருத்துவ அலுவலர் அர விந்தநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய மேலாளர் கோவிந்தராஜ் வரவேற்றார்.  கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் பேசுகையில், “திருவிடைக் கழி பூச்சாத்தனூர் பகுதியில் சிமெண்ட்  சாலை அமைக்க வேண்டும். தில்லை யாடி நாகப்பன் தெருவில் உள்ள மண்  சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும். தற்போது மழைக் காலம் தொடங்க உள்ள நிலையில் பொதுமக்களின் நலன் கருதி மருதம்பள்ளம் ஊராட்சி சின்னங்குடி கிராமத்தில் மயான சாலை அமைக்க வேண்டும். எரவாஞ்சேரி பாலம் முதல் இலுப்பூர் மாரியம்மன் கோயில் தெரு  வரை தார்ச்சாலை மற்றும் நான்கு தெரு  மின்விளக்குகள் அமைக்க வேண்டும். இலுப்பூர் தெற்கு தெருவில் சாலை அமைக்க வேண்டும். முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் தொடக்கப்  பள்ளிகளில் காலை உணவு மற்றும்  மதிய உணவு தயார் செய்ய தனித்  தனியாக சமையல் கூடங்கள் அமைக்க வேண்டும். கிடாரங்கொண்டான் கிரா மத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொ ருள் வாணிப கழக கிடங்குக்கு செல்லும்  சாலையை கான்கிரீட் சாலையாக அமைத்து தர வேண்டும். செம்ப னார்கோயில் வட்டாரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி யில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத் திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.  ஆறுபாதி ஊராட்சியில் உள்ள அரசு  தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்” என வலியுறுத்தி னர்.  இதனைத் தொடர்ந்து ஒன்றியக் குழு தலைவர் பேசுகையில், தற்போது  உறுப்பினர்கள் விடுத்துள்ள கோரிக் கைகள் குறித்து உரிய பரிசீலனை செய்து  நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வேளாண்மை இணை இயக்குநர் பட்டுக்கோட்டையில் திடீர் ஆய்வு

தஞ்சாவூர், அக்.15 -  தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்  நல்லமுத்து ராஜா, பட்டுக்கோட்டை வட்டார வேளாண்  விரிவாக்க மையத்தில் அமைக்கப்பட்டுள்ள குதிரைவாலி  செயல் விளக்க திடலில் ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு வழங்க இருப்பு  வைக்கப்பட்டுள்ள தென்னங்கன்றுகளை உரிய நேரத்தில்  அனைத்து வட்டாரங்களுக்கும் அனுப்பி வைத்திடவும், தமிழ்நாடு பசுமை காடுகள் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி பட்டிய லிடவும் அறிவுறுத்தினார்.  தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் உட்பட பல்வேறு  திட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள இலக்கினை 2023 டிசம்பர் மாத இறுதிக்குள் அடைந்திட உதவி வேளாண்மை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தி, சம்பா நாற்றங்கால் மற்றும் நேரடி விதைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  ஆய்வின் போது, பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை  உதவி இயக்குநர் ச.மாலதி, வேளாண்மை உதவி அலுவ லர்கள் உடனிருந்தனர். 

பட்டுக்கோட்டையில் 
ஓய்வூதியர் கையெழுத்து இயக்கம்

தஞ்சாவூர், அக்.15-  தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க பட்டுக்கோட்டை வட்டக்கிளை கூட்டம், கிளைத் தலை வர் கண.கல்யாணம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தணிக்கையாளர் பொ.சமுதாக்கனி பேசினார்.  ஓய்வூதியர்களுக்கான தேர்தல் கால வாக்குறுதி களை நிறைவேற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். 70 வயது  முதிர்வுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதி யமாக ரூ.7,850 வழங்க வேண்டும்.  மருத்துவக் காப்பீடு திட்டத்தை முறையாக ஆய்வுக ளுக்கு உட்படுத்தி நியாயம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி, ஒரு லட்சம் ஓய்வூதியர்களிடம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெறுகிறது. இதனொரு பகுதி யாக, பட்டுக்கோட்டையில் நடைபெறும் இயக்கத்தை மாவட்டத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் ந.செல்வம் நன்றி கூறினார்.

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

பாபநாசம், அக்.15 - இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் ஞாயிறன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அவரது படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.  பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி வளா கத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாபநாசம் லயன்ஸ் கிளப்  தலைவர் ராஜா முகமது, செயலர் ஜெகதீசன், பொருளா ளர் ஜோதி, மாவட்டத் தலைவர்கள் சாப்ஜான், சம்பந்தம்,  பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், வணி கர் சங்கம் செந்தில், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய விண்ணப்பிக்கலாம் 

தஞ்சாவூர், அக்.15-  தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியா ளர்கள் ஒன்றியம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பொதுமக்க ளுக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தூய்மையான மற்றும் தரமிக்க ஆவின் பால் மற்றும் ஆவின் உபபொருட் களான நெய், வெண்ணெய், கோவா நறுமணம் ஊட்டப்பட்ட பால், பாதாம் மிக்ஸ் பவுடர், மைசூர்பா,  ஐஸ்கிரீம் வகைகள் ஆகியவற்றை அரசு நிர்ணயித்துள்ள  நியாயமான விலையில் வழங்கி வருகிறது.  மேலும் ஐஸ்கிரீம் வகைகளான குல்ஃபி, கோன், சாக்கோபார், கப் வகைகள் (50, 100, 500, 1000, 4500  மி.லி) அனைத்தையும் தற்போது தாராளமாக வழங்கி வரு கிறது. ஆவின் பால் மற்றும் ஆவின் உபபொருட்களில் எந்த விதமான ரசாயனமோ, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வண்ணங்களோ மற்றும் சுவையூட்டிகளோ கிடையாது.  மேற்கண்ட அனைத்து ஆவின் பொருட்களும் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்குமாறு அந்தந்த பகுதி முக வர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறோம்.  தற்போது தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆவின் பால்  உபபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விநியோ கம் செய்வதற்கு மொத்த விற்பனையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் முழு வி பரங்கள் அறிய தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை யில் உள்ள ஆவின் அலுவலகத்தை (வேலை நாட்களில்)  அக்.31 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  நேரிலோ அல்லது (தஞ்சாவூர் -8015304733, மயிலாடுதுறை  -9385679957, திருவாரூர் -8015304771, மேலாளர் (விற்பனை)- 8220205137) தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம்.  எங்களது தயாரிப்புகள் அனைத்தும் முன்னெச் சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, அரசின் அறிவு றுத்தலின்படி, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படு கிறது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.

குளத்தூரில் மாட்டு வண்டி பந்தயம் 

தூத்துக்குடி,அக்.15- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  குளத்தூர் ஸ்ரீ வெட்டூர் பெருமாள் சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது, சிறிய மாடுக்கு 8 கிலோ மீட்டர் தூரமும் ,பூஞ்சிட்டு 6 கிலோ மீட்டர் தூரம் நிர்ணயம் செய்யபட்டு போட்டியானது இரு பிரிவுகளாக  நடை பெற்றது.  இதில் மொத்தம் 66 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.  போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர், மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக  பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நலவாரிய பணப் பயன்களை  தாமதமின்றி வழங்க வேண்டும் கட்டுமானத் தொழிலாளர்கள் கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, அக்.15 - இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் சங்க மணப் பாறை வட்ட ஆண்டு பேரவை ஞாயிறன்று மணப் பாறையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் மணி தலைமை வகித்தார்.  சிஐடியு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சிவ ராஜன், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், கட்டுமான சங்க திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கட்டுமானத் தொழி லாளர்களுக்கு பென்சன் தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் கட்டுமானத் தொழி லாளர்களுக்கு ஓய்வுபெறும் வயதை 55 ஆக குறைக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவ ருக்கும் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். நல வாரிய பணப்பயன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்டத்தின் புதிய தலை வராக மணி, செயலாளராக நித்தியானந்தம், பொருளா ளராக சகாயராஜ் உட்பட 17 கொண்ட புதிய குழு தேர்வு செய்யப்பட்டது.

பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில்  பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அனுமதித்திடுக!

சிஐடியு ஆட்டோ தொழிற்சங்கம் கோரிக்கை தஞ்சாவூர், அக்.13 -  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை யில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்க  கூட்டம் வீரசேகரன் தலைமையில் நடை பெற்றது. விவேகானந்தன் வரவேற்றார். சிஐடியு நகரப் பொறுப்பாளர் ரெ.ஞான சூரியன் விளக்கிப் பேசினார்.  கௌரவத் தலைவராக எஸ்.கந்தசாமி, சங்க ஆலோசகராக ஞானசூரியன், தலை வராக வீரசேகரன், செயலாளராக விவேகா னந்தன், பொருளாளராக பால.விக்னேஷ்வ ரன், துணைத் தலைவர்களாக மூவேந்தர், தர்மா, மணி, துணைச் செயலாளர்களாக பாஸ்கர், சிவா, வினோத், செயற்குழு உறுப் பினராக பி.சண்முகம் உள்ளிட்ட 15 பேர்  கொண்ட செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.  புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மெரினா ஆறுமுகம், மோரீஸ் அண்ணாதுரை, முருக. சரவணன் ஆகியோர் பேசினர். பொருளா ளர் பால.விக்னேஷ்வரன் நன்றி கூறினார்.  பட்டுக்கோட்டை ரயில் நிலையத் துக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். பிள்ளை யார் கோயில் தெரு பகுதியில் அதிகளவு மருத்துவமனை உள்ளது, இது ஒரு வழிப் பாதை எனக் கூறி காவல்துறை அனுமதி மறுப்பதால், அவசர காலங்களில் மருத்துவ மனைக்கு சென்று வருவது சிரமமாக உள்ளது.  அவசர காலங்களில் ஒருவழிப் பாதை யில் செல்ல காவல்துறை அனுமதி வழங்க  வேண்டும். பட்டுக்கோட்டை நகரத்தில் உள்ள  ஆட்டோ கிளைகளில் சங்கப் பலகை அமைப பது, கிளை சங்கத்தை உருவாக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.