அறந்தாங்கி, ஜன.22- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி அரசு மருத்துவமனையில் விஷ முறிவு மருந்து இல்லாததாலும், சிகிச்சைக்கு காலதாமதம் ஏற்பட்ட தாலும் பாம்புக்கடி சிகிச்சைக்கு வந்த அப்சர் என்ற சிறுவன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான். இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரை அதிர்ச்சி யில் ஆழ்த்தியது. மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமித்து அடிப் படை வசதிகளை செய்து தர வேண் டும் என்று பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர். ஆனால் இதுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை, விஷமுறிவு சிகிச்சை உயிர்காக்கும் அவசர சிகிச்சை இல்லாதது உள்பட மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் என் காளிதாசன் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கரு.இராமநாதன், விசிக ஒன்றிய செயலாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். விசிக சாகுல்ஹமீது, மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஜெகதை செய்யது ஆகியோர் பேசினர். விவசாயத்தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணைச்செயலாளர் கலைமுரசு ஆகியோர் கண்டன உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.