நாங்குநேரியில் பட்டியலின மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அன்னவாசல் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் (பொ) எம்.ஜோஷி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் டி.சலோமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.