புத்தாண்டில் புத்தக கண்காட்சி
கரூர், டிச.6 - தமிழ்நாடு அறிவி யல் இயக்கத்தின் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கிளை மாநாடு பள்ளப் பட்டி கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாநாட் டிற்கு கிளைத் தலைவர் தங்கப்பாண்டியன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் கே.இளங்கோ வேலை அறிக்கையையும், கிளை பொருளாளர் பாஸ்கர் வரவு-செலவு அறிக்கை யையும் முன்வைத்தனர். அறிவியல் இயக்க மாவட்ட துணைச் செய லாளர் முனைவர் என். சாகுல்ஹமீது சிறப்புரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் ஐ.ஜான் பாட்ஷா நிறைவு செய்து பேசினார். 2024 புத்தாண்டு அன்று அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் புத்தக கண் காட்சி நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
தமிழ் கூடல் நிகழ்ச்சி
பொன்னமராவதி, டிச.5 - தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பாக, மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்ப டும் தமிழ் கூடல் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி தாலுகா சடை யம்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி யின் தலைமை ஆசிரியர் விமலா தலைமை வகித் தார். முதுகலை தமிழாசிரி யர் பாக்யராஜ் வரவேற் றார். பொன்னமராவதி முத்தமிழ் பாசறை அறங் காவலர் குழு செயலா ளர் பட்டிமன்ற நடுவர் நெ.இரா.சந்திரன் “இனிமை தமிழ்மொழி எமது” என்ற தலைப்பில் இலக்கிய உரையாற்றி னார்.
கண் பரிசோதனை முகாம்
பாபநாசம், டிச.5 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வாசன் கண் மருத்துவமனை, பாப நாசம் எஸ்.பி.ஐ கிளை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. இதில், வங்கி வாடிக்கையாளர்கள், பொது மக்கள் 80 பேரி டம் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டது. 12 பேருக்கு கண் புரை கண் டறியப்பட்டது. 11 பேருக்கு பார்வையில் குறைபாடு இருப்பது கண் டறியப்பட்டு கண்ணாடி அணிய பரிந்துரைக்கப் பட்டது. வாசன் கண் மருத்துவமனை மேலா ளர் முருகானந்தம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.
கால்நடை சுகாதார முகாம்
பாபநாசம், டிச.5 - கால்நடை பரா மரிப்புத் துறையின் கும்ப கோணம் கோட்டம், அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கம் இணைந்து சிறப்பு கால்நடை சுகா தார மற்றும் விழிப் புணர்வு முகாமை நடத்தின. தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த சூலமங்கலத்தில் நடந்த முகாமில், அய்யம் பேட்டை கால்நடை உதவி மருத்துவர் ஏஞ்சலா சொர்ணமதி, கணபதி அக்ரஹாரம் கால்நடை உதவி மருத்துவர் சங்க மித்ரா ஆகியோர் மாடு களுக்கு சிகிச்சை அளித் தனர். மேலும், நாய் களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. இதில் 3 கிடேரி கன்று களுக்கு பரிசும், 3 பே ருக்கு மேலாண்மை விருதும் வழங்கப்பட்டன.
கொடுக்கூர் - குடிகாடுக்கு தார்ச்சாலை வசதி செய்து தர கோரிக்கை
அரியலூர், டிச.5 - அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகேயுள்ள கொடுக்கூர் - குடிகாடுக்கு தார்ச்சாலை மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலர் ம.ச.கலைவாணியிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், கொடுக்கூர் - குடிக்காடு மற்றும் குடிக்காடு தெற்குத் தெரு, 6 முதல் 8 வார்டு பகுதிகளின் சாலைகள் குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாக மிகவும் மோசமாக உள்ளன. தற்போது பெய்து வரும் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால், அப்பகுதியே குளம் போல் காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மேற்கண்ட பகுதிகளை அளவீடு செய்து, தரமாக தார்ச்சாலை மற்றும் வடிகால் வசதிகளை செய்து தரவேண்டும். வாகனங்கள் செல்ல தடையாக உள்ள மின் கம்பங்களை மாற்றி சாலையோரங்களில் நட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் நாளை ஏலம்
திருச்சிராப்பள்ளி, டிச.5 - திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலை யங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப் பட்ட 126 இருசக்கர வாகனங்களை அரசுடமையாக்கும் வகையில், கடந்த மே 13 அன்று அரசிதழில் செய்தி வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட அந்த 126 வாகனங்களை இதுவரை யாரும் உரிமை கோரவில்லை. எனவே மாவட்ட வரு வாய் அலுவலரால் அவை அரசுடைமை ஆக்கப்பட் டுள்ளன. இதையடுத்து அந்த 126 வாகனங்களை டிச. 7 (வியாழன்) அன்று பொது ஏலத்தில் விட முடிவு செய்யப் பட்டுள்ளது. திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் (கே. கே நகர்) காலை 10 மணியளவில் ஏலம் நடைபெற உள்ளது. அவற்றை ஏலம் எடுக்க விரும்புவோர் புத னன்று (டிச.6) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களை பார்வை யிடலாம். மேலும் ஏலம் நடைபெறும் நாளில் (டிச.7) காலை 8 மணி முதல் 10 மணிக்குள் வாகனத்தை ஏலம் எடுப்ப தற்கான முன்வைப்புத் தொகை ரூ.5000 மற்றும் ஆதார் அட்டை நகலை செலுத்தி, பெயர் விவரங்களை முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் முடிந்த தும் ஏலத்திற்கான தொகை மற்றும் சேவை வரியை செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித் துள்ளார்.
கிராம சபைக் கூட்டம்
தஞ்சாவூர், டிச.5- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றி யம், கெங்காதரபுரம் ஊராட்சி, குண்டாமரைக் காடு கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தூய்மை பாரத இயக் கம் தொடர்பான இக்கூட்டத் திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பழனி வேலு தலைமை வகித்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன் னிலை வகித்தார். பேரா வூரணி சட்டமன்ற உறுப்பி னர் நா.அசோக்குமார் பொது மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். சாலை, பேருந்து வசதி கள், இலவச வீடு, குளத் திற்கு படித்துறை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் பேசினர்.
சிஐடியு-வுடன் இணைந்த ஆட்டோ சங்கம்
அரியலூர், டிச.5 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு தேவாங்க முதலியார் தெரு, ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்கத் தலை வர் இராம.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ஆர்.சிற்றம் பலம், பொருளாளர் கண்ணன், மெய்யப்பன், சிவபெருமாள், சாலை போக்குவரத்து தொழிலா ளர் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலாளர் சபரிநாதன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் வெங்கடாசலம், மீன் சுருட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஜெயங்கொண்டம் நான்கு ரோடு ராஜேந்திர சோழன் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச் சங்கம், சிஐ டியு சங்கத்துடன் இணைக்கப்பட்டது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆட்டோ சங்க தலைவராக இராம.ராமச்சந்தி ரன், செயலாளராக இராஜசரவணன், பொருளா ளராக மா.விஜய், துணைத் தலைவராக சு.ரமேஷ், துணைச் செயலாளராக வி.ரவிக்குமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். ஜெயங்கொண்டம் கடைவீதி பகுதியில் பொது கழிப்பறை கட்ட வேண்டும். பயணிகள் நிழற்குடையை பயணிகள் அமரும் வகையில், நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்த வேண்டும். காந்தி பூங்காவை தூய்மைப்படுத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் லுங்கிகளை கட்டிக்கொண்டு ஆட்டோ ஓட்டக் கூடாது. காக்கி உடை அணிந்து ஓட்ட வேண்டும். ஆட்டோ வையே நம்பி வரும் பயணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்க செய லாளர் ராஜ.சரவணன் நன்றி கூறினார்.
குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும்
ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் கோரிக்கை
பொன்னமராவதி, டிச.5 - புதுக்கோட்டை மாவட் டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வட்டார ஒருங் கிணைப்பாளர் முருகன் தலைமை வகித்தார். சங்க மாவட்டத் தலைவர் பழனிச் சாமி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஏனாதி ராசு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் தூய்மைப் பணி யாளர்கள், தூய்மைக் காவ லர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்கள், சுகாதார உறுப்பினர்கள், வட்டார ஒருங்கிணைப்பா ளர்கள் கலந்துகொண்டனர். கிராம மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி இயக்குப வர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின்கீழ் ரூ.13, 848 ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவ லர்-பணியாளர்கள், பள்ளி சுகாதாரப் பணியாளர்கள், சுகாதார ஊக்குநர்கள் ஆகி யோருக்கு ரூ.11,000 வழங்க வேண்டும். அனைத்து திட்ட கணினி இயக்குபவர் களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட் டின் அடிப்படையில், ரூ.22 ஆயிரம் வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் கூலியை உயர்த்துவது போல, கணினி இயக்குபவர்களுக்கும் உயர்த்த வேண்டும். திண்டுக்கல்லில் நடைபெ றும் மாநாட்டில் அதிகம் பேர் கலந்துகொள்வது. சமூக தணிக்கையாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
நாளை முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, டிச.5 - முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வியாழன் (டிச.7) அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், கைம்பெண்கள் குறைகள் குறித்த மனு களை அன்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் நேரடி யாக வழங்கலாம். மனு அளித்திட விரும்பும் முன்னாள் படைவீரர்களது கோரிக்கை குறித்த மனுக்களை, இரட்டைப் பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் வழங்க வேண்டும். மனு அளிக்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள், காலை 11.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேரில் வந்து தங்களது மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
குடிநீர் தேவைக்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி துவக்கம்
தஞ்சாவூர், டிச.5 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கெங்காதரபுரம் ஊராட்சி, குண்டாமரைக்காடு கிரா மத்தில் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த ஆழ்துளைக் கிணறு பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடி தண்ணீருக்காக அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ரூ.4.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை, பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர் நா.அசோக்குமார் துவக்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் ரேவதி பழனிவேலு, ஊராட்சி செயலாளர் ராம சுப்பிரமணியன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்ட னர்.
காய்ச்சல் மருத்துவ முகாம்
தஞ்சாவூர், டிச.5- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரம் குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்குட்பட்ட புனல்வாசல், வாடிக் காடு அங்கன்வாடி மைய வளாகத்தில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடைபெற்றது. செருவாவிடுதி வட்டார மருத்துவ அலுவலர் எஸ். அருள் தலைமையில் மருத்துவ அலுவலர் எம்.தீபா மற்றும் மருத்துவக் குழுவினர், பொதுமக்களை பரிசோ தித்து சிகிச்சையும் ஆலோசனையும் வழங்கினர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர் எம்.பூவலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ஏ.மூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் சிவாம் பாள் ராமராஜ், ஊராட்சி செயலர் சத்தியராஜ் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
சாலை வசதியின்றி அவதிப்படும் உமா மகேஸ்வரபுரம் மக்கள் அதிகாரிகள் கவனிப்பார்களா?
கும்பகோணம், டிச.5 - கும்பகோணம் அருகே பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்ற னர். இதை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. புறநகர் பகுதி களில் வடிகால் வசதி இல்லாததால், தண்ணீர் செல்ல வழி யில்லை. இதனால் வீடுகள் மற்றும் குடியிருப்புகளை சுற்றி லும் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. வேறுவழி யின்றி, இந்த மழைநீரில் நடந்து சென்று பொது மக்கள் தங்களின் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள் கின்றனர். இந்நிலையில், கும்பகோணம் ஒன்றியம் உமா மகேஸ்வரபுரம் ஊராட்சிக்குட்பட்ட புளியம்பேட்டை தெருவில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 1500- க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்தே காணப்படுகிறது. லேசான மழை பெய்தாலும், இப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. ஆங்காங்கே குட்டை கள் போன்று மழைநீர் தேங்கி விடுகிறது. எனவே இந்தத் தெருவில் கால்வாய் வடிகால் வசதியுடன்கூடிய சாலை அமைத்து தர வேண்டும் என ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதை அதிகாரிகள் கவனித்து, இப்பகுதியில் உள்ள சாலையை உயர்த்தி, தார்ச்சாலையாக மாற்றுவதோடு, வடிகால் வசதி செய்து தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கேங்மேன்களுக்கு பாதுகாப்பான பணி வழங்க கோரிக்கை
தஞ்சாவூர், டிச.5- தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் பணிபுரியும் கேங் மேன்களுக்கு, மின்சாரம் இல்லாத இடங்களில் மட்டுமே பணி வழங்க வேண்டும். சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல் வழங்கிட வேண்டும். கள உதவியா ளராக மாற்றம் செய்திட வேண் டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் மின் வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் காணிக்கைராஜ், பொரு ளாளர் சங்கர் மற்றும் நிர்வா கிகள் உரையாற்றினர். மாநி லச் செயலாளர் எஸ்.ராஜா ராமன் நிறைவுரையாற்றி னார். முன்னதாக தஞ்சை மின்வாரிய தலைமை பொறி யாளர் மற்றும் மேற்பார்வை பொறியாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.