தஞ்சாவூர், நவ.26 - தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்க ளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச்சங்கத்தின் 5 ஆவது மாவட்ட பேரவை கூட்டம் சனிக்கிழமை தஞ்சாவூரில் நடை பெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.வீராச்சாமி தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சுமதி வர வேற்றார். கூட்டத்தை, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கோதண்டபாணி துவக்கி வைத்தார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் தி.ரவிச்சந்திரன், மாவட்டப் பொருளாளர் ஆர்.மதியழகன் ஆகியோர் பேசினர். தமிழகம் முழுவதும் சத்துணவு மையங்க ளில் அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகிய பணியிடங்கள் வருடக் கணக்கில் காலி யாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை தாமதமின்றி உடனடியாக நிரப்பவும், அதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அரசின் சத்துணவு திட்டம் சார்ந்த அரசா ணைகள் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையால் வெளியிடப்படுகிறது.
ஆனால் திட்டத்தை அமல்படுத்துவது ஊரக வளர்ச்சித் துறை, மாநகராட்சி, நகராட்சியாக உள்ளது. இதனால், சத்துணவு மையத்தை யார் வேண்டு மானாலும் பார்வையிடலாம் என்ற நிலை உள்ளது. மேலும், ஊதியம், மானியம் உரிய காலத்தில் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே சத்துணவு திட்டத்துக்கு தனித் துறையை ஏற்படுத்தி தர வேண்டும். பெண் சத்துணவு அமைப்பாளர், சமைய லர், உதவியாளர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அரசு ஊழியர் களுக்கு வழங்கப்படுவது போல் சத்துணவு ஊழி யர்களுக்கும் 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட் டுள்ளதால், நகர ஈட்டுப்படி வழங்குவதற்கான ஆணையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.அறிவழ கன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் அ.ரெங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.லதா நன்றி தெரிவித்தார்.