கரூர்,நவ.02- கரூர் மாவட்டம், மாயனூர் ஊராட்சி, கீழ மாயனூரில் கிராம சபை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூர் மாவட்ட பொருளாளர் கே.சுப்பிரமணியன் கோரிக்கை மனுவை வழங்கினார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், மாயனூர் ஊராட்சிக்குட்பட்ட கட்டளை, ரெங்க நாதபுரம், கீழ மாயனூர், மேலமாயனூர் ஆகிய கிராமங் களை இணைத்து அமராவதி ஆற்று நீர்ப்பாசனத்தின் மூலம் மாயனூர் கிளை வாய்க்கால் கட்டளையிலிருந்து பிரிந்து மேற்கண்ட கிராமங்கள் வழியாக விவசாய நிலங்களில் சென்று கும்பக்குழி வழியாக காவேரி ஆற்றில் கலக்கிறது. இந்த மாயனூர் கிளை வாய்க்காலை நம்பி சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களில் நெல், சோளம் ஆகியவைகளை விவசாயிகள் சாகுபடி செய்து வரு கிறார்கள். இந்த மாயனூர் கிளை வாய்க்காலை தூர்வாரி சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிறது. வாய்க்காலை தூர்வாராத காரணத்தால், அமராவதி ஆற்றில் தண்ணீர் வரும்போது இந்த மாயனூர் கிளை வாய்க்காலில் தண்ணீர் வருவதில்லை, இதனால் விவசாய நிலங்களுக்கும் தண்ணீர் கிடைப்பதில்லை, பெரும் விவசாய நிலம் கொண்டவர்கள், போர் மூலம் தண்ணீர் எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். சிறு, குறு விவசாயிகள் தண்ணீர் கிடைக்காமல், பெரும் விவசாயிகளிடம் தண்ணீருக்காக கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலை உள்ளது. அவர்கள் தண்ணீர் கொடுக்காவிட்டால் சிறு, குறு விவசாயிகள் அப்படியே விட்டு விடுகிறார்கள். இதனால் விவசாய நிலம் பாழ்பட்டு போகிறது. விவசாய நிலத்தை யும், சிறு, குறு விவசாயிகளையும், விவசாயத்தையும் பாது காத்திடவும் உடனடியாக மாயனூர் ஊராட்சி மன்றம், கரூர் மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் மாயனூர் கிளை வாய்க்காலை தூர்வாரி செப்பனிட வேண்டும்.