districts

திருச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைத்திடுக!

தஞ்சாவூர், டிச.2-  திருச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில்  தலைவர் இ.வீ.காந்தி ஒன்றிய அரசுக்கு  அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:  தஞ்சாவூர் மாவட்டத்தில் பேரா வூரணி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி பகுதிகள் காவிரி ஆற்றின் கடைமடை பகுதிகளாக இருப்பதால் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நெல் விவசாயத்தில் இருந்து  பெரும்பாலானோர் தென்னை விவசா யத்துக்கு மாறிவிட்டனர். கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா  புயலில் 60 சதவீத தென்னை மரங்கள்  அழிந்தன. சமீபத்தில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் ஒரு குழுவாக சென்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமன், வேளாண் துறை அமைச்சர்  நரேந்திரசிங் தோமர், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஸ்கோயல் ஆகி யோரை சந்தித்து மனு அளித்தோம். இதைத் தொடர்ந்து ஒன்றிய நிதிய மைச்சர் தில்லியில் இருந்து ஒரு நிபு ணர் குழுவை பொள்ளாச்சிக்கு அனுப்பி  வைத்து, அங்குள்ள தென்னை விவ சாயிகளின் குறைகளை கேட்டறிந்து, தீர்க்க முயற்சித்து வருகிறார். ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் தென்னை விவ சாயிகளின் குறைகள் இதுவரை களையப் படவில்லை. ஒன்றிய அரசு நிர்ணயம் செய்யும்  குறைந்தபட்ச ஆதார விலை தென்னை  விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதை அரசின் கவ னத்திற்கு எடுத்துச் சென்று, நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து விவசாயி களுக்கு நியாயமான விலை கிடைக்கச்  செய்ய வேண்டும். ஒன்றிய அரசு விதி களின்படி, தேங்காயின் மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் மட்டுமே கொப் பரையாக கொள்முதல் செய்யப்படு கிறது.  வெளிச்சந்தையில் விலை வீழ்ச்சி காரணமாக மீதியுள்ள 75 சதவீத தேங் காய் கொப்பரை, சந்தை விலையான ரூ.80-க்கும் குறைவாக விற்பனை செய் யப்படுவதால், தென்னை விவசாயி கள் நட்டம் அடைந்து வருகின்றனர். இதற்கு ஒன்றிய அரசு உடனடியாக தீர்வு  காண வேண்டும். பேராவூரணி அருகில் கிழக்கு கடற் கரை பகுதியில் ஏற்றுமதி சார்ந்த தொழில் மையம் தொடங்க முன்வர வேண்டும். தென்னை விவசாயிகளின் நலன் காக்க ஏற்படுத்தப்பட்ட தென்னை வளர்ச்சி வாரியம், கேரளாவில் கொச் சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அதன் மண்டல அலுவலகம், தென்னைக்கு எந்த தொடர்பும் இல்லாத சென்னையில் இயங்குகிறது. தற்போது தமிழ்நாட்டின் மைய நகர மான திருச்சியில் தென்னை வளர்ச்சி வாரியம் அமைக்க வேண்டும். மேலும் ஒன்றிய அரசு சார்பில் நிதி, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட  ஒரு விவசாய நிபுணர் குழுவை அமைத்து, பேராவூரணி பகுதிகளில் ஆய்வு செய்து தென்னை விவசாயி களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.