districts

img

தென்பாதி கிராமத்தில் புதிய பாலம் கட்ட கோரிக்கை

மயிலாடுதுறை, ஜன.30- மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மாதானம் ஊராட்சி தென்பாதி கிராமத்தில் நாடார் தெரு உள்ளது. இங்கு சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்  பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வரு கின்றனர்.  இப்பகுதிக்கு மாதானம் தேசிய நெடுஞ்சாலையிலி ருந்து சாலையோரம் உள்ள பாசன வாய்க்காலுக்கு குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் வழியே தான் செல்ல வேண்டும். பாலத்தைக் கடந்த பிறகு ஒத்தை யடி பாதை வழியே இந்த தெரு வுக்கு சிரமத்துடன் செல்ல வேண்டும்.  இந்நிலையில், இத்தெரு வுக்கு செல்ல பிரதான பாலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அந்தப் பாலத்தின் ஒரு பகுதி 4 மாதத்திற்கு முன்பு  சேதமடைந்து இடிந்து விழுந் தது. இதனால் இந்த தெரு பகு திக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வாய்க்காலில் இறங்கியும், அங்குள்ள வாய்க்  காலில் ஷட்டர் மதகின் மேல் உள்ள சிறு பலகையை கடந்தும் சென்று வருகின்றனர்.  எனவே போர்க்கால அடிப் படையில் அப்பகுதி மக்களின் நலன் கருதி வாய்க்கால் குறுக்கே பாலம் கட்ட வேண்டும்.  மேலும் தெருவுக்கு செல்லும் ஒற்றையடி பாதையை தாமத மின்றி அகலப்படுத்தி தார் சாலையாக மேம்படுத்தி தர நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.