districts

img

8 மணிநேர வேலை, ஓய்வூதியம் வழங்க கோரிக்கை அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

தஞ்சாவூர்/அரியலூர், டிச.12-  கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேரம் வேலை, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் செவ்வாயன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு 8 மணி நேர வேலை மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும். கமலேஷ் சந்திரா கமிட்டியின் அனைத்து சாதக மான பரிந்துரைகளையும் உடனடியாக நிறை வேற்ற வேண்டும். கிராம அஞ்சல் ஊழியர்கள்  மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ வசதிகள் வழங்க வேண்டும். வேலைப்பளுவை காரணம்  காட்டி லெவல் 2 ஊதியம் வழங்காமல், லெவல்  1 ஊதியம் வழங்குவதை நிறுத்த வேண்டும். கிளை அஞ்சலகங்களுக்கு லேப்டாப், பிரிண்டர், அதிவேக இணைய சேவை உள்ளிட்ட  வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தஞ்சாவூர் தலைமை  அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது ஆர்ப்பாட்டத் துக்கு போராட்டக்குழு தலைவர் கள் எம்.முருகேசன், ஏ.சூரிநாத் ஆகியோர் தலைமை வகித்தனர். கும்பகோணம்  கும்பகோணம் தலைமை தபால் நிலையம் வளாகத்தில் நடந்த போராட்டத்துக்கு அகில  இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தின்  மாநிலப் பொதுச் செயலாளர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் கனக சபாபதி, சங்க ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இந்த காலவரையற்ற போராட்டத்தால், தஞ்சாவூர், கும்பகோணம் பகுதியில் உள்ள கிராமப் புறங்களில் தபால் விநியோகம் முழு மையாக பாதிக்கப்பட்டது. அரியலூர் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர்-திருச்சி  சாலையிலுள்ள அஞ்சல் நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்தத்தால், மாவட்டத்திலுள்ள 166 அஞ்சல் நிலையங்களில் சேவை பாதிக்கப்பட்டது.