அரியலூர், நவ.26 - அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதி யில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஜெயங்கொண்டம் அருகே உள்ள கே.கே.சி.நகர் முரளிதரன் தெருவில் கடந்த சில தினங் களாக தினமும் இரவு பெய்தது. இதனால் தெருக்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்து கள் தொல்லை அதிகம் இருப்பதால், மக்கள் வீடுகளில் அச்சத்துடன் உள்ளனர். தேங்கி யுள்ள மழைநீரிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் மழைநீர் வடிகால் வாய்க்கால் வசதி இல்லாததால்தான் மழை நீர் வெளியேற முடியாமல் அப்படியே தேங்கியுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை காலை அப்பகுதி மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் சாலை மறி யலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங் கொண்டம் போலீசார் மற்றும் ஊர் முக்கியஸ் தர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கழிவுநீர் வாய்க்கால் அமைத்து, மழைநீர் வடிகால் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தனர். அதன்பே ரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.