காவிரி படுகைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் புதனன்று (அக்.11) முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வர்த்தக வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார். திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பிரபாகரன், தலைமை குழு உறுப்பினர் ஆர்.முருகேசன், சிபிஎம் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நகரச் செயலாளர் டி.ஏ.தஞ்சாவூர், அக்.10 - தஞ்சாவூரில் மாணவர்களின் சுற்றுலாப் பயணத்தை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு, தஞ்சாவூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரசு அருங்காட்சியக வளா கத்தில் சுற்றுலாத் துறை சார்பாக, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை விடுதிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 50 பேர், செவ்வாய்க் கிழமை ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் கொடி யசைத்து சுற்றுலாவினை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டையில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான சித்தன்னவாசல், குடுமியான்மலை, புதுக்கோட்டை அருங்காட் சியகம் மற்றும் திருமயம் கோட்டை ஆகிய இடங்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். சுற்றுலாவில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப் பட்டன. மாணவ, மாணவிகளுக்கு உணவு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் கா.நெல்சன், உதவி சுற்றுலா அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.