districts

img

வேலை நேரத்தை வரையறை செய்க!

தஞ்சாவூர், செப்.2-  வேலை நேரம் வரையறை செய்யப்பட வேண்டுமென மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலை நேரத்தை வரையறை செய்ய வேண்டும். வேலைப் பளுவை குறைக்க வேண்டும். சம்பளத்தை கால தாமதமின்றி வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள ஊக்க தொகையினை வழங்க வேண்டும். சீருடை, அடையாள அட்டை வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கை களை முன்வைத்து, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக,  தஞ்சாவூர் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாவட்டச் செய லாளர் சாய் சித்ரா, பொருளாளர் இலக்கியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொ டர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சுகா தாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவல கத்தில் மனு அளிக்கப்பட்டது.