districts

37 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப முடிவு

திருச்சிராப்பள்ளி, செப்.13- ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ்  செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணி யிடங்கள் தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வர வேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்து, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ்  செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணி யிடங்களை மாணவர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரி யர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்- 2, பட்ட தாரி ஆசிரியர்-12, இடைநிலை ஆசிரியர் 23 என்ற அளவில் காலிப்பணியிடங்கள் உள்ளன.  முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கு ரூ 18,000, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ. 15,000, இடைநிலை ஆசிரியர் ரூ12,000  மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப் படும். வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளு டன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருப வர்கள் (இல்லையெனில்) வரையறுக் கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள். இடைநிலை ஆசிரியர்கள் நியம னத்தில் பட்டியலினத்தவர். பள்ளி அமைந்  துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.  விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடி யாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சித் தலை வர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலு வலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் செப்.20-ஆம் தேதி மாலை ஐந்து மணிக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட  ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள் ளார்.