districts

திருச்சி முக்கிய செய்திகள்

டிச.22 புதுகையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, டிச.13-  புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்ட அரங்கில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில்  தலைமை யில் நடைபெற உள்ளது.   எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர்சாகு படிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்துக் கொள்வதுடன் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளைத் தெரிவித்து பயன் பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவிடைமருதூர் ஊராட்சியில்  வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

கும்பகோணம், டிச.13 - திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் தண்டாளம் ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற நிலையில் உள்ள, கிராம ஊராட்சி செயலக கட்டிடமும், ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் நேரடி கொள்முதல் நிலையமும், ஏனநல்லூர் ஊராட்சியில் ரூ.11.70 லட்சம் மதிப்பீட்டில் மேலத்தெருவில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இரண்டு வீடுகளின் கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், கோவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்து வரும் புதிய இரண்டு வகுப்பறை கட்டிடப் பணிகளையும், முடிவுற்ற தருணத்தில் உள்ள புதிய அங்கன்வாடி கட்டிடப் பணிகளையும் ஆய்வு செய்தார். கும்பகோணம் வட்டம் நாச்சியார்கோயில் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, குழந்தைகள் பிரிவு, ஆய்வகம், மருந்தகம் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது, திருவிடைமருதூர் ஒன்றியக் குழு தலைவர் சுபாதிருநாவுக்கரசு, கும்பகோணம் வட்டாட்சி யர் வெங்கடேசன், திருவிடைமருதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், வீரமணி  உள்ளிட்டோர் உட னிருந்தனர்.

புள்ளியியல் துறை அலுவலர்கள்  கோரிக்கை அட்டை அணிந்து பணி

திருச்சிராப்பள்ளி, டிச.13 - புள்ளியியல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடி களை களைந்திட கூட்டுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். தொழில்நுட்ப பணியிடங்களை ஒப்படைக்க முயலும் துறையின் செயல்பாட்டை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கத்தினர் திங்களன்று கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள புள்ளியியல் சார்நிலை அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் முருகேசன், முன்னாள் மாநில பிரச்சார செயலாளர் பால்பாண்டி ஆகியோர் தலைமையில் ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.  இந்த போராட்டம் புதன்கிழமை வரை நடைபெறு கிறது. கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 20 அன்று சென்னையில் துறை தலைமையிடத்தில் பெருந்திரள் முறையீடு நடைபெற உள்ளது.

அரசு மருத்துவமனையில்  செல்போன் திருடியவர் கைது

அரியலூர், டிச.13 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடையாறு கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசன் (43). இவரது மகளுக்கு பிரசவ வலி காரணமாக ஜெயங் கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வெங்கடேசன் மருத்துவமனை வெளிப்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 5 மணி அளவில் இவரது சட்டை பாக்கெட்டுக்குள் இருந்த செல்போன் ஒருவர் எடுத்தார். சுதாரித்துக் கொண்ட வெங்கடேசன் அவரை பிடித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் அவர் கோவிந்தபுத்தூர் கிராமம் மெயின் ரோட்டுத் தெருவை சேர்ந்த தெய்வ மணி மகன் மணிகண்டன் (46) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

பைக்கிலிருந்து மயங்கி விழுந்த  அரசுப் பேருந்து நடத்துநர்  பலி

அரியலூர், டிச.13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அமிர்தராயன்கோட்டை கிராமம் மேலத் தெருவை சேர்ந்த வர் தங்கராசு. இவரது மகன் ரவிச்சந்திரன் (54) ஜெயங் கொண்டம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வந்தார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக மருந்து மாத்திரை சாப்பிடுவது வழக்கமாக இருந்த நிலையில் சம்பவத்தன்று மாத்திரை உட்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு  சென்று கொண்டிருந்தார் அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனையில் முதல் உதவி சிகிச்சை பெற்று ,மேல் சிகிச்சைக் காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் வர்ஷினி ஜெயங்கொண் டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

தனியார் பேருந்து - லாரி மோதல்  ஓட்டுநர்களின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

தஞ்சாவூர், டிச.13-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூர் நோக்கி தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. பேருந்தை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை மாணிக்கம் நகரைச் சேர்ந்த வினோத் (33) என்பவர் ஓட்டி வந்தார். அதேபோல் மன்னார்குடியிலிருந்து தஞ்சாவூரை நோக்கி டாரஸ் லாரி வந்தது. இந்த லாரியை கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூரைச் சேர்ந்த தங்கதுரை (38) என்பவர் ஓட்டி வந்தார். அப்போது தஞ்சாவூர் அருகே மன்னார்குடி பிரிவு சாலை என்ற இடத்தில் வந்த போது, பட்டுக்கோட்டை யிலிருந்து வந்த தனியார் பேருந்தை முந்த முயன்ற லாரி, பேருந்து மீது மோதி, வலதுபுற சாலையின் தடுப்பு களை உடைத்துக் கொண்டு எதிர்த்திசையில் இருந்த வாய்க்காலுக்குள் கவிழ்ந்தது. அதேபோல் தனியார் பேருந்து லாரி மீது மோதி, சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீதும் மோதியது. இதனால் மின் கம்பம் உடைந்தது. இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் சாதுர்யமாக செயல்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்தில் மின்கம்பம் உடைந்ததால், அப்பகுதியில் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான பேருந்திலிருந்த 80-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து வந்த தஞ்சாவூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், தஞ்சாவூர் வட்டாட்சியர் ப.அருள்ராஜ் ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். அடிக்கடி விபத்து தஞ்சாவூர் அருகே பட்டுக்கோட்டை- மன்னார்குடி பிரிவு சாலை அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாகும். இந்த இடத்தில் தற்போது சாலைகள் அகலப்படுத்தப்பட்டுள் ளன. இதனால் வாகனங்கள் அந்த இடத்தில் அதிவேக மாக வந்து செல்கின்றன. விபத்துகளை தடுக்க, இந்த இடத்தில் உள்ள சாலைத் தடுப்பை ரவுண்டானாவாக மாற்றி அமைக்க வேண்டும்.  மேலும், தற்காலிகமாக அங்கு டிவைடர்களை அமைத்து வாகனங்களின் வேகத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.