districts

img

காவல்துறையின் மோப்ப நாய் இறப்பு: துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அடக்கம்

தஞ்சாவூர், ஜன.7- காவல்துறையில் இருந்த மோப்ப நாய் சனிக் கிழமை இறந்ததைத் தொ டர்ந்து, துப்பாக்கி குண்டு கள் முழங்க அதன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட காவ லில் மோப்ப நாய் பிரிவில் 5  நாய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றில் காவல் துறையில் 11 ஆண்டுகளாக இருந்து வந்த சச்சின் என்கிற மோப்ப நாய் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தட யங்களைக் கண்டறிவதற்கு காவல் துறையினருக்கு மிக வும் உதவியாக இருந்தது. மேலும், வெடிகுண்டு கண்டறிவதில் திறன் பெற்ற மோப்ப நாய் சச்சினை திருச்சி, கோவை உள்ளிட்ட  மாவட்டங்களில் பிரத மர், முதல்வர் வருகையின் போது பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.  வயது மூப்பு காரண மாக இந்த நாய்க்கு சில ஆண் டுகளுக்கு முன்பு ஓய்வு அளிக்கப்பட்டு, தொடர்ந்து காவல்துறையின் பராமரிப் பில் இருந்து வந்தது. இந்நி லையில், இந்த நாய் சனிக் கிழமை இறந்தது. பணியில்  இருக்கும் நாய் இறக்கும் போது, காவல் துறையினரின் மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுவது வழக்கம்.  ஆனால், மோப்ப நாய் சச்சினின் சேவையைப் பாராட்டி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் விருப்பத்தின் பேரில், 12 குண்டுகள் முழங்க, தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தின் பின்புறம் உள்ள இடத்தில் காவல் துறையினரின் மரியாதை யுடன் அடக்கம் செய்யப்பட் டது. பின்னர், இந்த நாயின் நினைவிடத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் மலர் வளை யம் வைத்து மரியாதை செலுத் தினர்.