தஞ்சாவூர், நவ.5 - ஆபத்தான நிலையில் உள்ள பட்டுப் போன கூந்தல் பனை மரத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணி பேரூராட்சி ஆனந்தவல்லி வாய்க்கால் வடகரை, தென்கரை பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் சார்பில், வர்த்தக சங்க முன்னாள் செயலாளர் பாரதி வை.நடராஜன், வட்டாட்சியர், பேரூராட்சி செயல் அலுவலர், பொதுப் பணித்துறை அதி காரிகள் ஆகியோருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். அந்த மனுவில், “பேராவூரணி பேரூ ராட்சி முதன்மை சாலையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் எஸ்டிடி திருமண மண்டபம் உள்ளது. இதன் அருகே ஆனந்த வல்லி வாய்க்கால் வடகரையில் 80 அடி நீள முள்ள கூந்தல் பனைமரம் உள்ளது. இந்த பனைமரம் கடந்த ஓர் ஆண்டாக பட்டுப்போன நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் கீழே விழும் அபாயம் உள்ளது. அருகிலேயே குடியிருப்புகள், திருமண மண்டபம், வர்த்தக நிறுவனம், அங்காடிகள் உள்ளன. மேலும், இந்தப் பகுதியில் தான், பள்ளிக் குழந்தைகள் பேருந்தில் ஏறிச் செல் கின்றனர். அருகிலேயே மின்கம்பிகளும் செல்கின்றன. இந்நிலையில், இம்மரம் முறிந்து அருகில் உள்ள மின்கம்பிகள் மீது விழுந்தால், பல உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக பட்டுப்போன மரத்தை அகற்றி விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.