districts

img

பொதுக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

பாபநாசம், மே 4 - தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ் தலம் அருகே புளியம்பாடி மேலத் தெருவில் ஊர் பொதுகுளம் உள்ளது. இந்தக் குளத்தை அப்பகு தியைச் சேர்ந்த சுரேந்திரன் ஏலத் தில் எடுத்து மீன்கள் வளர்த்து வந்தார். இந்நிலையில் குளத்தில் இருந்த எட்டு டன் அளவிலான மீன்கள், இரண்டு நாட்களாக செத்து  மிதக்கின்றன. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுரேந்திரன், கபிஸ் தலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கபிஸ்தலம் போலீசார் விசா ரணை மேற்கொண்டுள்ளனர்.