districts

img

சொத்துக்காக மகளை கொலை செய்துவிட்டனர்: ஆட்சியர் அலுவலகத்தில் தாய் புகார்

புதுக்கோட்டை, மார்ச் 18 - சொத்துக்கு ஆசைப்பட்டு தனது ஒரே மகளை கொலைசெய்து விட்ட தாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் ஜனநாயக மாதர் சங்கத்தினருடன் தயார் கண்ணீர் மல்க மனு அளித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திரு மயம் அருகே ஊனையூர் பகுதியைச்  சேர்ந்தவர் ஜெயராணி. இவரது கண வர் ஜான் கடந்த 2008 ஆம் ஆண்டு  உயிரிழந்துவிட்டார். இதனைத் தொ டர்ந்து தனது ஒரே மகளான ஜெனிபரு டன், தனது பெற்றோர் ஊரான அண்டக் குடிப்பட்டியில் வசித்து வந்துள்ளார்.  இவரது மகள் ஜெனிபர் (17) கல்லூரி யில் முதலாம் ஆண்டு பயின்று வந்த நிலை யில், கடந்த 11.9.2023 அன்று திருமயத்தில் உள்ள தையல் கடைக்கு சென்றுவிட்டு, குடும் பத்திற்கு தெரிந்த நபரான சேதுரப்பட்டி பகுதி யைச் சேர்ந்த அசோக் (25) என்பவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்பு, இரு  சக்கர வாகனத்தில் உறவினர் அசோக்கு டன் ஜெனிபர் தனது வீட்டிற்குத் திரும்பி யுள்ளார்.  அப்போது கணபதி என்பவரது தோட்டம் அருகே, அவர்கள் சென்ற வாகனம் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஜெனிபர் ஆபத்தான நிலையில் திரு மயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். சுய நினைவின்றி அனுமதிக்கப் பட்டவர் அன்றைய தினமே உயிரிழந்துள் ளார்.  காயம் ஏதுமில்லை; உடற்கூறாய்வில் ஆதாரமில்லை இந்நிலையில், ஜெனிபர் எந்த காயமும் இன்றி உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத் தியதாக கூறி ஜெனிபரின் தாயார் ஜெய ராணி திருமயம் காவல் நிலையத்தில் புகார்  அளித்துள்ளார். அதில் தனது மகள் இறப்பில்  சந்தேகம் இருப்பதாகவும், இதற்கு அசோக் மற்றும் தனது உறவுக்காரரான மேல  நல்லிப்பட்டியைச் சேர்ந்த லூர்துசாமி (50) மற்றும் இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த அவரது  சகோதரி (40) செல்வராணி ஆகியோர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரி வித்துள்ளார். மேலும் உடற்கூறாய்விலும் விபத்தில் இறந்ததற்கான ஆதாரம் இல்லை  எனவும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.  6 மாதமாக காவல்துறை நடவடிக்கை இல்லை இது மட்டுமின்றி ஜெயராணியின் தந்தை  காளிமுத்து இறப்பதற்கு முன்பு தனக்கு ஆண் வாரிசு இல்லாததால், தனது இரண்டு  மகள்களான ஜெயராணி, செல்வராணி ஆகிய இருவருக்கும் தனது சொத்து களைப் பிரித்துக் கொடுத்துள்ளார். இந்த  சொத்துகளை கைப்பற்றவே ஜெயராணியின்  தங்கை செல்வராணி மற்றும் லூர்துசாமி, அசோக் ஆகியோர் திட்டமிட்டு தனது மகள் ஜெனிபரை கொலை செய்துள்ளதாகவும் ஜெயராணி புகார் தெரிவித்துள்ளார்.  இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங் களைக் கடந்தும், தனது மகளின் இறப்பு குறித்து காவல்துறையினர் எந்தவித நடவ டிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதனால்  இந்த வழக்கை கொலை வழக்காக பதிந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி ஜெயராணி புதுக்கோட்டை மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் அலு வலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பெட்டியில் தனது மனுவை அளித்தார்.  மேலும், தனது ஒரே மகளை திட்டமிட்டு சொத்துக்காக கொலை செய்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்தார். அவருடன், சிபிஎம் திருமயம் ஒன்றியச் செயலாளர் துரை.நாராயணன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச்செல்வி, செயலாளர் பி.சுசிலா உள்ளிட்டோர் உட னிருந்தனர்.