அரியலூர், ஜூலை 18-
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இந் நிலையில் குறைதீர் கூட்டத்திற்கு கைக் குழந்தையுடன் வந்த பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
திருநெல்வேலி நகரம், குன்றுத் தெரு வைச் சேர்ந்தவர் லட்சுமணன் மனைவி பேச்சியம்மாள் (30). இவர் தற்போது அரி யலூர் மாவட்டம் கீழப்பழுவூர் சுண்ணாம்பு கால்வாய் தெருவில் வாடகை வீட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார்.
கடந்த 20.5.2023 அன்று இவர்களது 7 வயது மகளுக்கு வீட்டின் உரிமையா ளரான ராமசாமி மகன் பரமசிவம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்தனர். மேலும், பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பேச்சியம்மாள் கடந்த 19.6.2023 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
காவல் ஆய்வாளர் மிரட்டல்
இந்நிலையில் கடந்த 24.6.2023 அன்று கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி மற்றும் சிலர், பேச்சியம்மாள் வீட்டுக்குச் சென்று அவரிடம், பரமசிவம் மீது கொடுக் கப்பட்ட புகார் மனுவை திரும்ப வேண்டும் என்றும், இல்லையென்றால் பொய் வழக்குப் போட்டு, உன்னை சிறையில் அடைப்போம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்ச லில் இருந்த பேச்சியம்மாள், திங்களன்று தனது கணவர் லட்சுமணன் மற்றும் கைக் குழந்தையுடன் ஆட்சியரை சந்திக்க வந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
ஆட்சியரை சந்திக்க விடாமல் தடுப்பு
இதையடுத்து பேச்சியம்மாள், கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெய்யை உட லில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீ சார் அவரை தடுத்து நிறுத்தி, வலுக்கட்டா யமாக வேனில் ஏற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பேச்சி யம்மாளை கடைசி வரை ஆட்சியரை சந் திக்க விடாமல் போலீசார் தடுத்தனர். இச் சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.