பாபநாசம், ஜூன் 11-
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்துள்ள திருவை யாறு- கும்பகோணம் பிரதான சாலையிலிருந்து சோமேஸ்வரபுரம், வீர மாங்குடி செல்லும் சாலையில் உள்ள சில மின் கம்பங்களில் சிமெண்ட் காரை பெயர்ந்து இரும்புக் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த மின் கம்பங்கள் மேலும் பலவீனமடைந்து விபத்து நேரும் முன் அவற்றை மாற்றவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.