districts

img

மாற்றுத்திறனாளியான தலித் பெண்ணை செருப்பு போட்டு வரக்கூடாது என்று அவமதித்த விஏஓ

திண்டுக்கல். ஜுன்.28-

     கிராம நிர்வாக அலுவ லகத்திற்குள் செருப்பு போட்டு வரக்கூடாது என்று  கூறிய கிராம நிர்வாக அதி காரியை (வி.ஏ.ஓ) வன்  கொடுமை தடுப்புச்சட் டத்தில் கைது செய்யக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மகளிரணி துணைச்செயலாளர் தேசி யக்கொடியுடன் வந்து திண் டுக்கல் ஆட்சியரிடம்புகார் அளித்துள்ளார்.  

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா விற்கு உட்பட்டது தளிப்பட்டி.  இங்குள்ள ஒரு நிலத்தை வாங்குவது தொடர்பாக, அந்த நிலத்தில் வில்லங்கம் இருக்கிறதா என்று பார்ப்ப தற்காக திண்டுக்கல் அருகே உள்ள கள்ளிப்பட்டியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தை கள் கட்சியின் மகளிர் அணி மாவட்ட துணைச் செயலா ளர் சுந்தராம்பாள் புளியம்  பட்டி கிராம நிர்வாக அலு வலகத்திற்கு சென்றார். சுந்த ராம்பாள் ஒரு மாற்றுத்திற னாளியும் கூட. அப்போது கிராம நிர்வாக அதிகாரி செந்  தில் குமார், அலுவலகத்திற் குள் செருப்பணிந்து வரக் கூடாது,கழட்டிவிட்டு வர  வேண்டும் என்று அறிவுறுத்தி யுள்ளார்.

    அதற்கு சுந்தராம்பாள், நான் ஒரு விபத்தில் காயம்  அடைந்ததால் என்னால் செருப்பை கழட்டிவிட்டு வர முடியாது என்று கூறினார்.  ஆனால் சுந்தராம்பாள் மற்  றும் அவருடன் வந்தவர் களை வெளியே தள்ளியுள் ளார் வி.ஏ.ஓ. செந்தில்குமார். மேலும் சுந்தராம்பாள் நெஞ்சைப்பிடித்து தள்ளிய தாகவும் கூறப்படுகிறது.  

    இது தொடர்பாக குஜிலி யம்பாறை வட்டாட்சியர் ரமே ஷிடம் கூறியபோது, எந்த நட வடிக்கையும் எடுக்க முன்வர வில்லை என்று கூறப்படு கிறது.

    இந்நிலையில் புதனன்று  சுந்தராம்பாள் தேசியக்  கொடியை ஏந்திக்கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர்களுடன் மனுக்  கொடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். ஆட்சியர் பூங்கொடியைச்  சந்தித்து, கிராம நிர்வாக அலு வலர் செந்தில்குமாரை தீண்டாமைவன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது  செய்து நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று மனுக் கொடுத்தார்.  

    மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் பூங்கொடி பழனி கோட்டாட்சியர் நட வடிக்கை எடுக்க பரிந்துரை  செய்வதாக உறுதியளித் தார்.

     இது தொடர்பாக புளி யம்பட்டி விஏஓ செந்தில் குமார் ஒரு தனியார் தொலை க்காட்சிக்கு அளித்த பேட்டி யில், நடந்த சம்பவம் உண்மை  என்று ஒப்புக் கொண்டார்.  ஆனால், நான் எனது வீடு,  கோவில், அலுவலகம் ஆகி யவற் றிற்குள் செருப்ப ணிந்து செல்ல மாட்டேன். இது எல்லோருக்கும் தெரி யும் என்று நியாயம் கற்பித்து பேசியதாக கூறப்படுகிறது. சுந்தராம்பாள் திண்டுக்கல் மாவட்ட காவல்துறைக் கண்  காணிப்பாளரிடமும் புகார் கொடுத்துள்ளார். (நநி)