தஞ்சாவூர், ஆக.21-
தலித் இலக்கிய முன்னோடி கே.டானி யல், தனது மரணத் தருவாயில் எழுதி முடித்த, ‘சாநிழல்’ குறுநாவல் வெளியீடு மற்றும் நினைவு அஞ்சலி நிகழ்வு, தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில், தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கம், தஞ்சை மாவட்டக் குழு சார்பில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமுஎகச மாவட்டத் தலை வர் சா.ஜீவபாரதி தலைமை வகித்தார். மாநகர கிளைத் தலைவர் பிம்பம் சாகுல் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் நூலை வெளியிட, தமுஎகச மேனாள் மாநில தலை வர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் மனித உரிமை செயற்பாட்டா ளர் அ.மார்க்ஸ், சி.அறிவுருவோன், பெரியாரி யலாளர் பசு.கவுதமன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் என்.சிவ குரு, சிராஜூதின், எழுத்தாளர் கே.டானிய லின் மகன் வசந்தன் டானியல், மகள் தாரகா டானியல், வெற்றித் தமிழர் பேரவை மாநில துணைச் செயலாளர் இரா.செழியன், தமுஎகச மாவட்டச் செயலாளர் ஆர்.விஜய குமார், சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் கே.அன்பு, சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர் என்.குருசாமி, தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சா.தமிழ் வாணன் நன்றி கூறினார்.
கடந்த 1986 ஆம் ஆண்டு எழுத்தாளர் டானியல் சிகிச்சைக்காக இலங்கையில் இருந்து வந்து தஞ்சையில் தங்கியிருந் தார். அப்போது, சிகிச்சைக்கு மத்தியில் அவர் மருத்துவமனையில் இறந்தார். அவரு டைய உடல் தஞ்சை ராஜாகோரியில் இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கான இடு காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. அப் போது எழுதப்பட்ட இந்த நாவல் இப்போது தான் புத்தகமாக வெளியிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, டானியல் உடல் அடக்கம் செய்யப்பட்ட ராஜாகோரி மயானத்தில் அவ ருடைய நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தப் பட்டது.