திருச்சிராப்பள்ளி, ஆக.11 -
திருச்சிராப்பள்ளி மாவட்ட அனைத்து திரு அவைகளின் கூட்டமைப்பு மற்றும் தேசிய தலித் கிறிஸ்தவர் பேரவை இணைந்து, ‘தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரும் கருப்பு நாள்’ ஆர்ப்பாட்டம் மாநில பொதுச் செயலாளர் ஜான்சன் துரை தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை விளக்கி தமிழக பொது நிலையினர் பணிக்குழு மாநிலச் செயலாளர் பூபதி லூர்துசாமி, உச்ச நீதிமன்ற வழக்கறி ஞர் பிராங்க்ளின் சீசர் தாமஸ், பல்சமய உரை யாடல் மன்ற இயக்குநர் சார்லஸ் ஆகியோர் பேசினர். முன்னதாக சிஎஸ்ஐ திருச்சி மறை மாவட்டத் தலைவர் ராஜாமன்சிங் வரவேற்றார்.
தேசிய தலித் கிறிஸ்தவ பேரவை உறுப் பினர் லூயிஸ், சிஎஸ்ஐ திருச்சி தஞ்சை மண்டல பேராயர் சந்திரசேகரன், திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஆரோக்கி யராஜ், டிஇஎல்சி பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், திருச்சி கத்தோலிக்க மறை மாவட்ட எஸ்சி, எஸ்டி பணிக்குழு செயலாளர் அந்து வான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.