districts

திருச்சி முக்கிய செய்திகள்

தி.க. தலைவர் கி.வீரமணி பிறந்த நாள் விழா 

தஞ்சாவூர், டிச.2- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி 91 ஆவது  பிறந்த நாள் சுயமரி யாதை நாளாக கொண் டாடப்படுகிறது. இதை யொட்டி, சனிக்கிழமை ஆவணம் சாலை முக்கத் தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து, பொதுமக்க ளுக்கு இனிப்பு வழங்கப் பட்டது.  நிகழ்ச்சிக்கு திரா விடர் கழக மாவட்டச் செய லாளர் வை.சிதம்பரம் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப் பினர் அரு.நல்லதம்பி முன்னிலை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்  நா.அசோக்குமார் மற்றும் நிர்வாகிகள் பெரி யார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்ட னர்.

வழிகாட்டு நிகழ்ச்சி

பாபநாசம், டிச.2 - அய்யம்பேட்டை டெல்டா ரோட்டரி சங்கம்  சார்பில் பள்ளி மாண வர்களுக்கான கேரியர் கெய்டன்ஸ் வழிகாட்டு நிகழ்ச்சி நடந்தது. தஞ்சா வூர் மாவட்டம் அய்யம் பேட்டையை அடுத்த வழுத்தூர் செளகத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் சாதிக் அலி தலைமை வகித்தார்.  முன்னதாக ரோட் டரி கிளப் தலைவர் சுப்ர மணியன் வரவேற்றார். ரோட்டரி உதவி ஆளுநர்  வெங்கடேசன் முன் னிலை வகித்தார். சிறப்பு  விருந்தினராக ரோட்டரி உதவி ஆளுநர் சங்கரன் பங்கேற்று, தேர்வை எதிர் கொள்ளும் விதம், நல்ல மதிப்பெண் பெறுவது, உயர்கல்வி குறித்து பேசி னார். இதில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற் றனர். ரோட்டரி கிளப் செயலர் முகம்மது ரஹ்மத் துல்லா நன்றி கூறினார்.

வாக்காளர் விழிப்புணர்வு

பாபநாசம், டிச.2 - தஞ்சாவூர் மாவட்டம்  பாபநாசம் விவேகா னந்தா சமூக கல்விச்  சங்கம் சார்பில் வாக்கா ளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அம்மா பேட்டை அருகே உக் கடையில் நடந்த நிகழ்ச்சி யில் வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற் கொள்வது குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண் கள் பங்கேற்றனர். இதற் கான ஏற்பாட்டை கயல் விழி, மேரி ஆகியோர் செய்திருந்தனர்.

வடகிழக்கு பருவமழை  தயார் நிலையில்  நெடுஞ்சாலைத் துறை

அரியலூர், டிச.2 - அரியலூர் மாவட்டம்  செந்துறைப் பகுதியில்  வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத் துறை யினர் தயார் நிலையில் உள்ளனர். வடகிழக்குப் பருவமழையை எதிர் கொள்ளும் வகையில்  செந்துறை நெடுஞ்சா லைத் துறை உட்கோட்டம்  சார்பில் அலுவலர் சிவ குமார் தலைமையிலான பணியாளர்கள், தேவை யான மணல் மூட்டைகள்,  மீட்பு கருவி, இயந்தி ரங்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், உடனடி யாக பயணம் மேற் கொள்ள தேவையான வாகனங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

2024 அக்டோபருக்குள் தஞ்சையில் 4ஜி சேவை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் தகவல்

தஞ்சாவூர், டிச.2- தஞ்சாவூரில் 2024 அக் டோபருக்குள் 4 ஜி சேவை  வழங்கப்படும் என அந்நிறு வனத்தின் தஞ்சாவூர் பொது மேலாளர் பால.சந்திர சேனா தெரிவித்தார்.  தஞ்சாவூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில், தஞ்சா வூர் வணிகப் பகுதியின் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான தொலைபேசி ஆலோ சனைக் குழு கூட்டம் வியா ழக்கிழமை மாலை நடை பெற்றது.   இதில், தஞ்சாவூர் தொ குதி மக்களவை உறுப் பினர் எஸ்.எஸ். பழனிமாணிக் கம் தலைமை வகித்து பேசு கையில், “பி.எஸ்.என்.எல்.  எப்.டி.டி.எச். நல்ல முன் னேற்றம் அடைந்துள்ளது. கிராமப்புற பகுதியிலும், இ-சேவை மையங்களிலும் பி.எஸ்.என்.எல். சிறப்பான சேவையை வழங்கி வரு கிறது. இதில் பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் கடும் உழைப்பு பாராட்டத்தக்கது” என்றார்.  பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் பால.சந்திரசேனா பேசுகையில், “தஞ்சாவூரில் 4ஜி சேவை 2024, அக் டோபர் மாதத்துக்குள் வழங்கப்படும். அனைத்து அடிப்படை தரைவழி தொலைபேசி மற்றும் பிராட்பேண்ட் சேவைகளும் எப்.டி.டி.எச். ஆக மாற்றப் பட்டு வருகிறது” என்றார்.  இதில், தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர். முன்னதாக துணைப் பொது மேலாளர் எஸ்.ராஜ குமார் வரவேற்றார். என்.அமுதா நன்றி கூறினார்.

அமலாக்கத் துறையும், பாஜகவும்  ஒன்றுக்கொன்று உடந்தை ஜோதிமணி எம்.பி., குற்றச்சாட்டு

புதுக்கோட்டை, டிச.2-  அமலாக்கத் துறையின ரும் பாஜகவும் ஒருவருக் கொருவர் உடந்தையாக இருந்து வருகின்றனர் என்றார் கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதிமணி.  புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு  அவர் அளித்த பேட்டியில்,  முன்னாள் அதிமுக அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிக மாக 55 சதவீதம் சொத்து  சேர்த்துள்ளதாக ஊழல்  தடுப்பு மற்றும் கண்கா ணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள னர். அவர், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, ஜிபிஎஸ் கருவி, ஒளி பிரதிபலிப்பான் ஆகிய வற்றை குறிப்பிட்ட நிறுவ னத்தில்தான் வாங்க வேண் டும் என்று வலியுறுத்தி யுள்ளார். அவர் ரூ.1,500 கோடி  வரை ஊழல் செய்துள்ளதாக தென்னிந்திய லாரி உரிமை யாளர் சங்கம் வெளிப்படை யாகவே புகார் தெரிவித்து இருக்கிறது. இருந்தும் அவர்  மீதான விசாரணைக்கு ஆளு நர் ஏன் அனுமதி தர மறுக் கிறார்? பாஜக மாநிலத்  தலைவர் அண்ணாமலைக் கும் முன்னாள் அமைச்சர்  எம்.ஆர்.விஜயபாஸ்கருக் கும் தொடர்பு உள்ளது. அதனால்தான் இந்த ஊழல் குறித்து அண்ணாமலை பேசாமல் அமைதியாக இருக்கிறார். அமலாக்கத் துறையி னர் லஞ்சம் வாங்கி கையும்  களவுமாகப் பிடிபட்டுள்ள னர். அமலாக்கத் துறை யினரும், பாஜகவினரும் ஒரு வருக்கொருவர் செய்யும் தவறுகளுக்கு உடந்தையாக இருக்கின்றனர்” என்றார்.

 மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை, டிச.2 - புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், அதன் தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற மக்களவை உறுப் பினர் சு.திருநாவுக்கரசர் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.  பின்னர் திருநாவுக்கரசர் தெரிவிக்கையில், புதுக் கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதி  மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள் ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்றார்.  கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா முன்னிலை வகித்தார். மக்களவை உறுப்பினர்கள் கார்த்தி  ப.சிதம்பரம் (சிவகங்கை), எஸ்.ஜோதிமணி (கரூர்), சட்ட மன்ற உறுப்பினர்கள் மரு.வை.முத்துராஜா (புதுக் கோட்டை), எஸ்.டி.ராமச்சந்திரன் (அறந்தாங்கி), சா.மாங்குடி  (காரைக்குடி) மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா. கவிதப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேரிடர் கால முன்னெச்சரிக்கை பணிகள்: செயல் அலுவலர் ஆய்வு 

தஞ்சாவூர், டிச.2 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரூ ராட்சி செயல் அலுவலர் பா.பழனிவேல் ஆய்வு மேற்கொண் டார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பேரூராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான மணல்  மூட்டைகள், ஜெனரேட்டர்கள், ஏணிகள், புகை மருந்து அடிக்கும் இயந்திரம், பிளீச்சிங் பவுடர், கயிறு, மண் வெட்டி, கடப்பாறை, மரம் அறுக்கும் இயந்திரம், பாது காப்பு தலைக்கவசம் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள்  தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனது. பணியாளர் களும் தயார் நிலையில் உள்ளனர். வடிகால் வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது” என்றார்.  அப்போது, துப்புரவு ஆய்வாளர் அன்பரசன், துப்பு ரவு மேற்பார்வையாளர்கள் சிவசுப்பிரமணியன், வீரமணி,  டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மைப் பணி யாளர்கள் உடனிருந்தனர். 

எரிவாயுவை மாற்றி விற்பனை  செய்த 3 பேர் கைது

 தஞ்சாவூர், டிச.2 -  தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் வீட்டு உப யோக சிலிண்டர்களிலிருந்து எரிவாயு, வணிக பயன் பாட்டுக்கான சிலிண்டர்களுக்கு மாற்றி விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு புகார் வந்தது.  இதன்பேரில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புல னாய்வு காவல் துணைக் கண்காணிப்பாளர் சரவணன்,  ஆய்வாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் பிள்ளையார் பட்டியில் உள்ள கிடங்கில் வெள்ளிக்கிழமை சோதனை  நடத்தினர். இதில், நவீன கருவிகள் மூலம் வீட்டு உப யோக சிலிண்டர்களிலிருந்து வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களுக்கு எரிவாயுவை மாற்றி விற்பனை செய்யப்படுவது தெரிந்தது.  இதையடுத்து, அங்கிருந்த 150 சிலிண்டர்களையும், இதற்கு பயன்படுத்திய 4 சக்கர வாகனத்தையும் காவல்  துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிடங்கு  மேலாளரும், வாகன உரிமையாளருமான தஞ்சாவூர் கரந்தையைச் சேர்ந்த வி.சுப்பிரமணியன் (60), அம்மன் பேட்டையைச் சேர்ந்த எம்.சுப்பிரமணியன் (46), மயிலாடு துறை மாவட்டம் திருவாலங்காடைச் சேர்ந்த ஜி.கருணா நிதி (42) ஆகியோரை கைது செய்தனர்.

பள்ளி மாணவனை கடத்த முயற்சி

குழித்துறை, டிச.1- குமரி மாவட்டம், நட்டாலம் குளமாக்கிவிளையை சேர்ந்தவர்  ஜெயின் (44). இவர் கட்டிடத்தொழிலாளி. இவரது மகன் வினிஷ் நட்டாலம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாலை பள்ளி வகுப்பு முடிந்து இவர் வீட்டிற்கு நடந்து  சென்று கொண்டிருந்தார். புதுக்குளம் நான்கு வழிச்சாலை  அருகே வரும்போது புல்லட்டில் ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர் சிறுவனை பிடித்து கடத்த முயற்சி செய்துள்ளார். சிறுவன் கூச்சலிட்டு பிடியில் சிக்காமல் ஓடி  தப்பினார். இதுகுறித்து ஜெயின் மார்த்தாண்டம் காவல்துறை யினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மதுரை சிறையில் இருந்து  தப்பிய கைதியை பிடிக்க தனிப்படை

மதுரை, டிச. 2- மதுரை மத்தியச் சிறையில் இருந்து தப்பிச்சென்ற கைதியை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (47). இவர் கடந்த 2009?ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக தேனி நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 2016 முதல் மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  இவரது நன்னடத்தை காரணமாக சிறை வளாகத்தில் தோட்ட வேலைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் புதனன்று  மாலை சிறையில் இருந்து தப்பிச்சென்றார். இதுதொடர்பாக சிறை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் கரிமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கைதி ஜெயக்குமரை தேடி வருகின்றனர்.  இந்நிலையில் சிறைத்துறை சார்பில் உதவி சிறை அலுவலர்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தனிப்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பராமரிப்பு பணியால் திருச்சி-காரைக்குடி,  மானாமதுரை-இராமேஸ்வரம் ரயில் சேவை மாற்றம்

மதுரை, டிச.2-  திருச்சி-காரைக்குடி மற்றும் மானா மதுரை-இராமேஸ்வரம் பிரிவில் ரயில்  பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த பகுதி ரயில் போக்குவரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதன்படி திருச்சி-காரைக்குடி சிறப்பு ரயில் (06829) ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும்  கிறிஸ்துமஸ் தினம் தவிர டிசம்பர் 31 வரை  திருச்சியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மதியம் 12.15 மணிக்கு 120 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும்.  மேலும் திருச்சி-இராமேஸ்வரம்-திருச்சி  விரைவு ரயில்கள் (16849/16850) வெள்ளி,  ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் கிறிஸ்துமஸ்  தினம் தவிர டிசம்பர் 31 வரை மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும்.  ஏற்கனவே பாம்பன் பால வேலை காரண மாக இந்த ரயில் ராமநாதபுரம் வரை இயக்கப் பட்டு வருகிறது. எனவே இந்த ரயில் மானா மதுரை-இராமநாதபுரம் இடையே பகுதியாக  ரத்து செய்யப்படுகிறது என்று மதுரை கோட்ட  ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.