districts

பயிர்க் காப்பீட்டுக்கான காலத்தை நீட்டிக்க வேண்டும்

தஞ்சாவூர், நவ.14 -  பயிர் காப்பீடு செய்யும் தேதி நவ.15 (புதன்கிழமை)-யுடன் முடிவடையும் நிலை யில், காலநீட்டிப்பு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என். வி.கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:  கடந்து போன குறுவைப் பயிருக்கு காப்பீடு செய்ய அரசுகளிடம் கோரிக்கை வைத்து நிறைவேறாமலே போனது. தற் போது தண்ணீர் இல்லாததால், சந்தித்த இழப்புகளுக்கு யாரிடம் இழப்பீடு கோருவது  என்கிற கையறு நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல், நடப்பு  சம்பா சாகுபடியும் என்ன ஆகும் என தெரி யாத நிலையில், தொடர்ந்து பயிர் செய்யும்  பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய  இன்றோடு (15.11.2023) கடைசி நாளாகும். இதில் கடந்த மூன்று தினங்கள் விடுமுறை யும், மேலும் இணையதள சர்வர் முடக்கமும்  மிகப்பெரிய இடையூறை ஏற்படுத்தியதால், காப்பீடு செய்வதில் தாமதம் உள்ளது. காப்பீட்டிற்காக இணையதள மையங்க ளில் விவசாயிகள் காத்திருக்கிறார்கள். கால  தாமதமாக விவசாயப் பணிகள் துவங்கிய தால், காப்பீடு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது.  ஏற்கனவே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மும், விவசாயிகளும் காப்பீட்டிற்கு கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே, விவசாயிகள் படும் சிரமத்தை கருத்தில் கொண்டு பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை அரசுகளும், மாவட்ட நிர்வாகமும் நீட்டிப்பு செய்திட உடனே நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்  கொள்கிறோம்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.