districts

img

புதுகை மன்னர் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குக!

புதுக்கோட்டை, மார்ச்.7-  புதுக்கோட்டை மன்னர் கல்லூரி யில் 2024-25 கல்வியாண்டு முதல் புதிய பாடப்பிரிவுகளை உருவாக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தின் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் மன்னர் கல்லூரி கிளை மாநாடு வியா ழக்கிழமை கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அ .பாலாஜி தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் இரா.வசந்தகுமார் தொடக்கவுரையாற்றினார். கௌரவ விரிவுரையாளர் அறிவழகன் வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்த னன் நிறைவுரையாற்றினார். கிளைத் தலைவராக வி.தாரணிபிரியா, செய லாளராக எஸ்.தனுஷ்குமார், துணைத் தலைவர்களாக ஏ.அம்ரீஷ், எம்.கல்ப னா, துணைச் செயலாளர்களாக பி. விமல், எஸ்.அஸ்வீன் உள்ளிட்ட 23 பேர் கொண்ட புதிய கிளை தேர்வு செய்யப்பட்டது.  மன்னர் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வி ஆண்டு முதல் பி.ஏ., (பொலிட்டிக்கல் சயின்ஸ்), பி.ஏ., (டிபென்ஸ் ஸ்டெடி), பி.எஸ்சி., (விஷூ வல் கம்யூனிக்கேசன்), பி.எஸ்சி., (ஜியோக் கிராபி) உள்ளிட்ட பாடப்பிரிவுகளைத் தொடங்க வேண்டும். கல்லூரிகளில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஐசிசி கமிட்டியை செயல்படுத்த வேண் டும். கல்லூரி விடுதிகளில் குடிநீர், சுகா தாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கல்வி உதவித் தொகையை குறித்த காலத்தில் வழங்க வேண்டும். கௌரவி விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். கல் லூரியின் அனைத்துத் துறைகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற் படுத்த வேண்டும். மாணவிகளுக்கான பொது ஓய்வு அறை அமைத்திட வேண்டும். கல்லூரி உணவகத்தை விரிவுபடுத்திட வேண்டும்.  ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாணவிகள் அனை வருக்கும் இலவச நாப்கின் வழங்குவ தோடு, நாப்கின் எரியூட்டும் எந்திரம் செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் நகரச் செயலாளர் எஸ். மகாலட்சுமி வரவேற்க, புதிய கிளைச் செயலளார் எஸ்.தனுஷ்குமார் நன்றி கூறினார். முன்னதாக காம்ரேட் கலைக்குழுவின் பறையாட்ட நிகழ்வு கடைபெற்றது. மாநாட்டில் 200-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாண விகள் பங்கேற்றனர்.