தஞ்சாவூர், பிப்.14- தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஊராட்சி ஒன்றியம் மரக்காவ லசை ஊராட்சி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக் கோரியும், 30 ஆண்டுகளுக்கு மேலாக மின் இணைப்பு இல்லாத மக்களுக்கு மின் இணைப்பு பெற, வீட்டு வரி ரசீது வழங்காத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வா கத்தை கண்டித்து ஊராட்சி மன்ற அலுவல கம் முன்பு செவ்வாய்க்கிழமை காலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில், பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். சரளா செந்தில் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.வாசு, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.வேலுச்சாமி, வழக்குரைஞர் வீ.கருப்பையா ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மருங்கப்பள்ளம் சிபிஎம் கிளைச் செயலாளர் லெட்சுமணன் மற்றும் கிராம பொதுமக்கள் மணிமேகலை, சாந்தா, ஈஸ்வரி, சந்திரா, மாய்தா, பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், வட்டாட்சியர் அலு வலக அமைதிப் பேச்சுவார்த்தையில் மரக்காவலசை கிராமத்தில் குடிமனைப் பட்டா வழங்கியவர்களுக்கும், குடிமனை இல்லாதவர்களுக்கும் உள்ளூர் கிராமத் திலேயே புறம்போக்கு இடத்தை வகை மாற்றம் செய்து குடிமனை, அரசு வீடு வழங்க வேண்டும். கொடிவயல் பகுதியில் பிற்படுத்தப்பட்ட ஆதிதிராவிட மக்களுக்கு சமுதாயக்கூடம் அமைக்க வேண்டும். மரக்காவலசை வங்காளத்தோப்பு சாலை யை உடனடியாக தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும்’’ என வலி யுறுத்தப்பட்டன. பின்னர் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் சிபிஎம் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வட்டாட்சியர் வெளியூரில் இருப்பதால், புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என உறுதி அளித்ததை தொடர்ந்து காத்தி ருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.