அறந்தாங்கி/பொன்னமராவதி, ஏப்.16 - புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி ஒன்றியம் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில், திமுக தலை மையிலான இந்தியா கூட்ட ணியின் காங்கிரஸ் வேட்பா ளர் கார்த்தி சிதம்பரம் கைச் சின்னத்தில் போட்டியிடு கிறார். இவருக்கு வாக்கு கேட்டு அறந்தாங்கி ஒன்றி யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு சார்பாக, ஒன்றியச் செயலாளர் நாராயண மூர்த்தி தலைமையில், மாவட்டக் குழு உறுப்பினர் தென்றல் கருப்பையா, சிஐ டியு ஒன்றிய ஒருங்கிணைப் பாளர் கருணா, தமுஎகச கவிபாலா, வாலிபர் சங்க நிர்வாகி சசிகுமார் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ரெத்தின கோட்டை, எட்டியதளி, அர சர்குளம், சுப்பிரமணியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கைச் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்தனர். பொன்னமராவதி பொன்னமராவதியில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் போட்டியிடு கிறார். இவருக்கு கைச் சின்னத்தில் வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், ஒன்றி யச் செயலாளர் பக்ருதீன் ஆகியோர் தலைமையில், பொன்னமராவதி கடைவீதி, பேருந்து நிலையம் உட்பட பொன்னமராவதி நகர் பகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடு பட்டனர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் வெகுஜன அமைப்பினர் பங்கேற்றனர்.