districts

சாதிய வன்மத்தால் பள்ளி மாணவர் தற்கொலை?

புதுக்கோட்டை, நவ.5-  கீரனூர் அருகே மாணவர்களி டையே நடந்த சாதிய வன்மத்தால் மனமுடைந்த 11 ஆம் வகுப்பு மாண வன் தற்கொலை செய்து கொண்டார்.  இச்சம்பவத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டு மென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குன் றாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ள கொப்பம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் வீரமுத்து-உமா தம்பதி. இவர்களது மூத்த மகன் விஷ்ணுகுமார், கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11  ஆம் வகுப்பு படித்து வந்தார். பட்டியல் வகுப்பைச் சேர்ந்த விஷ்ணுகுமார் மீது, அதே ஊரைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அடிக்கடி சாதிய  வன்மத்துடன் பேசும் போக்கு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படு கிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக் கிழமை காலை கீரனூரில் மாணவன் விஷ்ணுகுமாரை சில மாணவர்கள் சாதியைச் சொல்லி திட்டியதோடு, அடித்துத் துன்புறுத்தி உள்ளனர். இச்சம்பவத்தை வீடியோ பதிவின் மூலமாக பார்த்த கீரனூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை விரட்டி களைந்துபோக வைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாண வன் விஷ்ணுகுமார், பள்ளிக்குச் செல்லாமல் பேருந்தில் ஏறி வீட்டுக்கு  வந்துள்ளார். பின்பு, வீட்டில் யாரும்  இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எம்.சின்னதுரை எம்எல்ஏ ஆறுதல் மாணவரின் உடலைக் கைப் பற்றிய உடையாளிப்பட்டி போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு வந்த கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், மாவட்டக் குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செயலா ளர் எஸ்.கலைச்செல்வன் உள்ளிட் டோர் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.  உடற்கூராய்வுக்குப் பிறகு விஷ்ணுகுமாரின் உடல் சனிக்கிழமை  சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப் பட்டு எரியூட்டப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விஷ்ணு குமாரின் வீட்டுக்குச் சென்று பெற் றோருக்கும், உறவினர்களுக்கும் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை ஆறுதல் கூறினார். மேலும், மாணவனின் மரணத்திற்குக் காரண மானவர்கள் மீது சட்டரீதியான நட வடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். குடும்பத்திற்கு உரிய நிவாரணமும், பாதுகாப்பும் வழங்கு வதோடு, அந்தப் பகுதியில் சாதியப்  பதற்றம் வராமல் இருக்கவும் நடவ டிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்தி உள்ளார். நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு  வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு  ஏழைக் குடும்பத்தின் நம்பிக்கை விளக்காக இருந்த பள்ளி மாணவன் விஷ்ணுகுமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சி யும், வேதனையையும் அளிக்கிறது.  தன்னுடன் படிக்கும் சக மாண வர்கள் தொடர்ந்து சாதிய வன்மத்து டன் நடந்து கொண்டதால் மன  உளைச்சலுக்கு உள்ளாகி விஷ்ணு குமார் தற்கொலை செய்து கொண்ட தாகக் கூறப்படுகிறது. நடந்துள்ள சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளி களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மகனை இழந்துள்ள குடும் பத்திற்கு உரிய இழப்பீடும், குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்” என தெரிவிக்கப் பட்டுள்ளது.