திருவாரூர், பிப்.24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக் குழு அலுவல கத்தில் தஞ்சம் அடைந்த காதலர் களுக்கு, கட்சித் தலைவர்கள் முன்னி லையில் வெள்ளிக்கிழமை சாதி மறுப்பு திருமணம் நடைபெற்றது. கட்சியின் திருவாரூர் மாவட்ட அலு வலகத்திற்கு வந்த இருவர், “நாங்கள் பட்டப் படிப்பை முடித்து உள்ளோம். நாங்கள் இருவரும் நீண்ட நாளாக காதலிக்கிறோம். எங்கள் வீட்டில் எங்களின் காதலுக்கு எதிர்ப்பு இருப்பதால், கம்யூ னிஸ்ட் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம்” என்றனர். பின்னர் அவர்கள் இருவரையும் விசாரித்த போது, இருவரும் திருத் துறைப்பூண்டியைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது. இவர்கள், திருத்துறைப் பூண்டி இராயநல்லூரைச் சார்ந்த வீர சேகரன்-சுமதி ஆகியோரின் மகன் வீ.தங்கமணி மற்றும் ராஜா-ஜெயா ஆகி யோரின் மகள் ரா.வான்மதி ஆவர். இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்வதில் உறுதியாக இருந்த நிலை யில், இருவரின் சம்மதத்தையும் அறிந்த சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ. சண்முகம், இவர்களுக்கு சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். திருமண நிகழ்வில் மாவட்டச் செய லாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.