districts

img

திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் சிபிஎம் மறியல்

திருச்சிராப்பள்ளி, செப்.7- ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலா ளர்கள்-விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் விரோ தக் கொள்கைகளைக் கண்டித்து திருச்சிராப்பள்ளி, புதுக்  கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறியலில் ஈடு பட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சிராப்பள்ளி


திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே சாலை  மறியலில் ஈடுபட்ட மாநிலக்குழு உறுப்பினர் சுகந்தி, மாநகர்  மாவட்டச் செயலாளர் ராஜா உட்பட 600-க்கும்  மேற்பட்டோர் திரண்டனர். முன்னதாக போராட்டக் காரர்களை காவல்துறையினர் கயிறுகட்டியும், பேரி கார்டு வைத்தும் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிச்செல்வன், கார்த்திகேயன், ரேணுகா,லெனின், ரெங்கராஜன், ராமச்சந்திரன் உட்பட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஒன்பது வருடங்களாக ஒன்றிய அரசு இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பு வழங்கவில்லை என்பதை  அம்பலப்படுத்தும் வகையில் பக்கோடா விற்றும், பிணம்  போல வேடமிட்டும் நூதனப் போராட்டம் நடைபெற்றது. நம்பர்-1 டோல்கேட்: நம்பர்-1 டோல்கேட்: பகுதியில் மூத்த தோழர் கே.வி.எஸ்.இந்துராஜ், மண்ணச்சநல்லூர் கிழக்குச் ஒன்றியச் செயலாளர் கனகராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்கள் சந்திரன், பன்னீர்செல்வம், இடைக் கமிட்டிச் செயலாளர்கள் மண்ணச்சநல்லூர் மேற்கு மனோகரன், புள்ளம்பாடி ரஜினிகாந்த், லால்குடி பாலு உட்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். துறையூர்: துறையூரில் ஒன்றியச் செயலாளர் ஆனந்தன்  தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் கடலூர் ரமேஷ்பாபு மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ராம நாதன், சுப்பு, நல்லுசாமி, தா.பேட்டை பாண்டியன், சந்திர மோகன், தொட்டியம் சத்தியமூர்த்தி, உப்பிலியபுரம் முத்துக்குமார் உட்பட ஏராளமானோர் துறையூர் பாலக்கரையிலிருந்து தபால் நிலையம் முன் மறியலில் ஈடுபட பேரணியாகப் புறப்பட்டனர். காவல்துறையினர் பேரணியை தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டனர் திருவெறும்பூர்: திருவெறும்பூர் ரயில் நிலையம் முன்பு தாலுகா செயலாளர்; மல்லிகா தலைமையில் மறியல் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சிவராஜ்  உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மணப்பாறை: மணப்பாறையில் ஒன்றியச் செயலா ளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மறிய லில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சிதம்பரம், நட ராஜன், மருங்காபுரி செயலாளர் தியாகராஜன், வையம்  பட்டி செயலாளர் வெள்ளைச்சாமி, உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மறியலில் ஈடுபட்ட மாநிலக்குழு உறுப்பினர் ஏ.லாசர், மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.அன்பு மணவாளன், ஜி.நாகராஜன், சு.மதியழகன், எஸ்.ஜனார்த்தனன், இடைக்கமிட்டிச் செயலாளர்கள் ஆர்.சோலையப்பன், டி.லட்சாதிபதி, ஆர்.வி.ராமையா, ஆர்.சக்திவேல் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் மறியலில் ஈடுபட்ட மாநிலக்குழு உறுப்பினரும் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமையன், த.அன்பழகன், ஒன்றியச் செயலாளர்கள் வி.ரெத்தினவேல், பி.வீரமுத்து, எஸ்.கலைச்செல்வன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஆலங்குடி: ஆலங்குடியில் மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலா ளர்கள் எல்.வடிவேல், எஸ்.மணிவண்ணன் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர். அறந்தாங்கி: அறந்தாங்கி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் தலைமையில் நடைபெற்ற மறிய லில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மனமேல்குடி பகுதிகளிலிருந்து ஒன்றியச் செயலாளர்கள் எம், நாராய ணமூர்த்தி நெருப்பு முருகேஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  பொன்னமராவதி: பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரை.நாராயணன், ஒன்றியச் செய லாளர் பக்ருதீன் உட்பட ஏராளமானோரை காவல்துறை யினர் கைது செய்தனர். இலுப்பூர்: இலுப்பூரில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி உட்பட  ஏராளமானோர் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் நடைபெற்ற மறியலில் 5 ஆயிரம்  பங்கேற்றனர். 1,589 பேரை காவல்துறையினர் கைது செய்த னர். 

பெரம்பலூர்

பெரம்பலூரில் மாநிலக்குழு சாமி.நடராஜன் தலைமை யில் நடைபெற்ற மறியலில் மாவட்டச் செயற்குழு என்.செல்லதுரை, அ.கலையரசி, எஸ்.அகஸ்டின் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  வேப்பந்தட்டை: வேப்பந்தட்டையில் மாவட்டச் செய லாளர் பி.ரமேஷ், ஆர்.கோகுலகிருஷ்ணன் தலைமை யில் மறியல் நடைபெற்றது. வேப்பூர்: வேப்பூரில் ஒன்றியச் செயலாளர் சி.செல்ல முத்து. ஏ.கே.ராஜேந்திரன் தலைமையில் மறியல் நடை பெற்றது. ஆலத்தூர்: ஆலத்தூரில் ஒன்றியச் செயலாளர் சி.செல்ல துரை, அ.ரெங்கநாதன் தலைமையில் மறியல் நடை பெற்றது.  மாவட்டம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட 212 பேரை  காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர்

அரியலூரில் பிஎஸ்என்எல் அலுவலகத்தை முற்றுகை யிட்ட மாநிலக்குழு உறுப்பினர் வாலண்டினா உள்ளிட்ட  பலரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டத்தில் மாவட்டச்  செயலாளர் இளங்கோவன் தலைமையில் தபால் நிலை யத்தை முற்றுகையிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆண்டிமடம்: ஆண்டிமடத்தில் மாவட்டச் செயற்குழு  ஆர்.மணிவேல் தலைமையில் மறியல் நடைபெற்றது. இங்கு கட்சி உறுப்பினர் கங்கா தனது கைக்குழந்தை யுடன் மறியலில் பங்கேற்று ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினார். தா.பழூர்: தா.பழூரில் ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையில் ஈடுபட்டவர்கள் கைது செய் யப்பட்டனர்.

கரூர்

கரூர் மாவட்டக்குழு சார்பில் கரூர் பேருந்து நிலையம்  அருகே சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலா ளர் மா.ஜோதிபாசு, மாநகர் செயலாளர் எம்.தண்ட பாணி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவா னந்தம், கா.கந்தசாமி சி.முருகேசன், சி.ஆர்.ராஜாமுக மது, மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலா ளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர். முன்னதாக காமராஜர் சிலையிலிருந்து பேரணியாகச் சென்று மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்துவதாகக் கரூர் மாவட்டக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், நகர் காவல்துறை பேரணிக்கு அனுமதி இல்லை என்று  ஜனநாயக குரலை நெரிக்கும் வகையில் அறிவித்ததாகக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. குளித்தலை: குளித்தலை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு ஒன்றியச் செயலாளர் இரா.முத்துசெல்வன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்  குழு உறுப்பினர்கள் பி.ராஜூ, கே.சக்திவேல், பி.ராம மூர்த்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட னர்.