districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடுக! சிபிஎம் கையெழுத்து இயக்கம், பிரச்சாரம்

திருச்சிராப்பள்ளி, நவ.26 - ஒன்றிய அரசு கொண்டு வந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெ றும்பூர் ஒன்றியக்குழு சார்பில் பூலாங்குடி பகுதியில் ஞாயிறன்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கையெழுத்து இயக்கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சிவ ராஜ் துவக்கி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் சி.தெய்வநீதி, ஒன்றியக் குழு உறுப் பினர்கள் கலந்து கொண்டனர். வேதாரண்யத்தில் பிரச்சாரம் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண் யம் வட்டம் காரியாப்பட்டினம், சாருமடை கடைத்தெருவிலும், ஆயக்காரன்புலம் கடைத் தெருவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேதாரண்யம் வடக்கு மற்றும்  தெற்கு ஒன்றியக் குழு சார்பில் தெரு முனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சாருமடையில் ஒன்றியச் செயலாளர் ஏ. வெற்றியழகன் தலைமையிலும், ஆயக்காரன் புலத்தில் வி.மாரிமுத்து தலைமையிலும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் தெற்கு ஒன்றி யச் செயலாளர் வி.அம்பிகாபதி, வி.தொ.ச ஒன்றியச் செயலாளர் எஸ்.அம்பிகாபதி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை.சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க  ஒன்றியத் தலைவர் ஏ.நடராஜன், துணைச் செயலாளர் டி.டி.தங்கசூர்யா மற்றும் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர்.