districts

img

சிபிஎம் மூத்த தோழர் சி.தம்பி அய்யா காலமானார்

புதுக்கோட்டை, பிப்.25-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தோழரும், கறம்பக்  குடி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பி னரும், மணமடை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான தோழர் சி.தம்பியய்யா உடல்  நலக்குறைவால் சனிக்கிழமை யன்று காலமானார்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது போது புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆரம்ப  கட்ட உறுப்பினராகவும் கறம்பக்குடி வட்டாரத்தில் கட்சி யை வளர்க்க அரும்பாடுபட்டவருமான தோழர் சி.தம்பி யய்யா. கறம்பக்குடி ஒன்றிய குழுவிலும், தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்திலும் நீண்ட காலம் பணியாற்றி யவர். தோழர் தம்பியயய்யா மக்களின் அடிப்படை வசதி களுக்காக பல்வேறு போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர்.  கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்  கப்பட்டிருந்த தோழர் தம்பியய்யா சனிக்கிழமை கால மானார். தோழரின் இறுதி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு அவரது சொந்த ஊரான மணமடை யில் நடைபெறவுள்ளது.  இவருக்கு ரங்கம்மாள், ஜெயம் ஆகிய இரண்டு துணை வியரும், எட்டு ஆண், ஒரு பெண் என ஒன்பது பிள்ளை களும் உள்ளனர். மூத்த மகன் த.அன்பழகன் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயற்  குழு உறுப்பினராக உள்ளார்.