தஞ்சாவூர், ஜன.4 - டெங்கு காய்ச்சல் பாதித்து பெண் பலியான நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காத சுகாதாரத் துறையினரைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், சானூரப்பட்டி கடைவீதியில் புதன்கிழமை மாலை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் மூளைக் காய்ச்சல் நோய் பரவி வருவ தாக கூறப்படுகிறது. இந்நோய் பாதிப் பால், செங்கிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த 24 வயது பெண் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இப்பகுதியில் பத்துக்கும் மேற் பட்டோருக்கு காய்ச்சல் பரவி உள்ளது. இந்நிலையில், சுகாதாரத் துறை யின் அலட்சியம் காரணமாக, செங்கிப் பட்டி பகுதியில் காய்ச்சல் பரவி வருவ தாகவும், நடவடிக்கை எடுக்காத சுகா தாரத் துறையினரை கண்டித்தும் சானூ ரப்பட்டி கடைவீதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.தமிழ்ச்செல்வி, ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் ஆகி யோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பூதலூர் வட்டாட்சியர் மரிய ஜோசப், திருவையாறு டிஎஸ்பி ராமதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இத னால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதுகுறித்து சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் கூறு கையில், “இப்பகுதியில் காய்ச்சல் பரவி வருவதை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சி, தஞ்சாவூர், புதுக் கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்கள் சந்திக்கும் செங்கிப்பட்டி பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்றை அமைக்க வேண்டும். இதனை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். எனவே மக்க ளுக்கான கோரிக்கையை அரசு நிறை வேற்றித் தர வேண்டும்” என்றார்.