districts

img

மோடி அரசைக் கண்டித்து சிபிஎம் ரயில் மறியல்

தஞ்சாவூர், செப்.8-  வேலையின்மை, விலைவாசி உயர்வு  உள்ளிட்ட மக்கள் விரோதக் கொள்கை களை கடைப்பிடிக்கும் மோடி தலைமையி லான ஒன்றிய அரசைக் கண்டித்து வியாழக் கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில்  பூதலூர் நான்கு ரோட்டில் இருந்து, 600-க்கும்  மேற்பட்டோர் ஊர்வலமாகச் சென்று மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி தலைமையில், பூதலூர்  ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியச் செயலாளர் சி.பாஸ் கர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச்  செயலாளர்கள் உள்ளிட்ட 288 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். இலுப்பூர் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடந்த மறியலுக்கு மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.சண்முகம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.ஆர்.சுப்பையா உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.