திருச்சிராப்பள்ளி, அக்,26- அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, சுகாதார வசதி, செய்து கொடுக்க வேண்டும், 100 நாள் தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், நத்தம் மயானப் பாதைக்கு மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும். அரசலூர் ஊராட்சி சுக்காம்பட்டி கிராமத்திற்கு பாதை எடுத்துக்கொடுக்க சொல்லி 2009, 2016 மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக பாதையை எடுத்துக்கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி தொட்டியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொட்டியம் வட்டக்குழு சார்பில் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் (பொறுப்பு) சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமநாதன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.