நாகப்பட்டினம், அக். 16. நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் கொத்தங்குடி ஊராட்சியில் குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. கொத்தங்குடி ஊராட்சியில் 2000 குடும் பங்கள் வசித்து வருகின்றன. கொத்தங்குடி, அய்யூர், தொழுதூர் உள்ளிட்ட கிராமங் களுக்கு கடந்த பத்து மாத காலமாக குடி தண்ணீர் முற்றிலும் வராத நிலையில் சமைப் பது, குடிப்பது உள்ளிட்ட அத்தியாவசியமான தேவைகளுக்கு கூடதண்ணீர் இல்லாத சூழ்நிலையில் ஊராட்சியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தி லிருந்து விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் தடைப்பட்ட சூழ்நிலையில்,அங்குள்ள குளங்கள் மற்றும் கிணறுகளில் இருந்து தண்ணீரை பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த தண்ணீரும் கூட குடிப்பதற்கும் சமைப்ப தற்கும் உகந்தது அல்ல. குடிநீர் கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் கொத்தங்குடி ஊராட்சி சார்ந்த பொதுமக்கள், சிபிஎம் நாகை மாவட் டச் செயலாளர் வி. மாரிமுத்து தலைமையில் திருத்துறைப்பூண்டி கச்சனம் சாலையில் காலிக் குடங்களுடனும்,தற்காலிகமாக பயன்படுத்தும் சுகாதாரமற்ற குடிநீர் கொண்ட குடங்களுடனும் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் திருக்குவளை வட்டாட்சி யர், தலைஞாயிறு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதனையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் ஏ.ராஜா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஞானசேகரன், ஜவகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.