மதுரை, மார்ச் 16- திரிபுராவில் கம்யூனிஸ்ட்டுகள் மீது பா.ஜ.க குண்டர்களின் தொடர் தாக்குதலைக் கண்டித்தும். ஒன் றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் சமையல் கேஸ் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் தெரு முனைக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மதுரை மாநகர் மேற்கு 1 ஆம் பகுதிக்குழு 69 வது வார்டு கிளைகள் சார்பில் கண்டனப் பேரணி மற்றும் தெரு முனைக்கூட் டம் புதனன்று சொக்கலிங்கநகரில் நடைபெற்றது. கிளைச்செயலாளர் பி. நிரு பன்சக்கரவர்த்தி தலைமை வகித் தார். மாநிலச் செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங்கம், மாவட் டச் செயலாளர் மா.கணேசன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், பகுதிக்குழு செய லாளர் கு.கணேசன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.பி. சிவராமன், பி. மல்லிகா ஆகியோர் பேசினர். கிளைச் செயலாளர் ஏ. பாக்கிய ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை யை உயர்த்தி கட்சியின் மதுரை மாநகர் வடக்கு 2ஆம் பகுதிக்குழு சார்பில் செல்லூர் 50 அடி சாலை யில் தெருமுனைக்கூட்டம் நடை பெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் கே. அலாவுதீன் தலைமை வகித்தார். ஜெ.ராஜு, எஸ்.ஆறுமுகம் முன் னிலை வகித்தனர். மாநில செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் ராம லிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட் டக்குழு உறுப்பினர் பி. ராதா, பகு திக்குழு செயலாளர் ஏ. பாலு ஆகியோர் பேசினர். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். வேல்தேவா, ஏ.ஜே. சேவியர் மற்றும் பலர் பங் கேற்றனர். சிவகங்கை கட்சியின் கல்லல் திருப்பத்தூர் தாலுகாக்குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலு காச் செயலாளர் ஏ. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஆர். மோகன், தாலுகா குழு உறுப்பி னர்கள் வி.எல் .பாலூ ,பிஎல். சக்தி வேல், எம்.பாக்கியலட்சுமி, பழ னிக்குமார், ராமமூர்த்தி ஆகியோர் பேசினர்.