அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, ஒன்றிய செயலாளர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.