திருவாரூர், ஜன.2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பின ரும், தமிழ்நாடு அரசு அனைத் துத்துறை ஊழியர் ஓய்வூதி யர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட நிறுவனர்களில் ஒருவருமான தோழர் எஸ். நடராஜன் (78) உடல்நலக் குறைவால் காலமானார். 2005 ஆம் ஆண்டு சங்கம் தொடங்கிய நாள் முதல் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டவர். அனைத்து போராட்டங்களி லும் கலந்து கொண்டவர். கூட்டுறவுத்துறை சார் பதிவா ளராக பணியாற்றி ஓய்வு பெற்ற காலம் முதல் சங்கத் தில் இணைந்து இடைவிடாது பணியாற்றியவர். அவ ருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது துணைவி யார் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். சிபிஎம் அஞ்சலி தோழரின் மறைவுச் செய்தி அறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி. சுந்தரமூர்த்தி, சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவ ரும், அலுவலக செயலாளரு மான எஸ்.ராமசாமி ஆகி யோர் கூடூரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று மலரஞ்சலி செலுத்தினர். ஓய்வூதியர் சங்க மாநில செய லாளர் குரு.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வி.முனி யன், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் உ.சண் முகம், முன்னாள் செயலா ளர் எம்.சவுந்தரராஜன், ஓய்வூ தியர் சங்க நிர்வாகிகள், அரசு ஊழியர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கிராம மக்கள் என திரளானோர் வீரவணக் கம் செலுத்தினர். ஞாயிற்றுக் கிழமை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.