கரூர், டிச.26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கரூர் மாவட்ட 9 ஆவது மாநாடு டிச.26, 27 ஆகிய இரண்டு நாட்கள் கடவூர் ஒன்றியம் தரகம் பட்டியில் உள்ள தோழர்கள் து.ரா.பெரியதம்பி, பி.இலக்குவன் நினை வரங்கம் சக்தி மஹாலில் நடை பெறுகிறது. மாநாட்டின் முதல் நாளில், தோழர் து.ரா.பெரியதம்பி நினை வாக ஜோதி பயணம் மற்றும் தோழர் பி.இலக்குவன் நினைவாக கொடிப் பயணம் நடைபெற்றது. க.பரமத்தி யில் துவங்கிய ஜோதி பயணக் குழு விற்கு, கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. க.பரமத்தி கடைவீதியில் நடை பெற்ற து.ரா.பெரியதம்பி நினைவு ஜோதி பயண துவக்க கூட்டத் திற்கு, பயணக் குழு தலைவர் சி.முரு கேசன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் கே. கந்தசாமி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் ஜோதி பய ணத்தை துவக்கி வைத்து பேசி னார். கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் அ.காதர்பாட்சா, கே.வி.பழனிச்சாமி, க.பரமத்தி ஒன்றிய செயலாளர் ஏ.ஆர்.ராம சாமி, பயணக்குழு உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். து.ரா.பெரியதம்பியின் நினைவு ஜோதி பயணத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாநக ரக் குழு சார்பில் கரூர் பேருந்து நிலை யம் ரவுண்டானா அருகில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மாநகரக் குழு செயலாளர் எம். தண்டபாணி தலைமை வகித்தார்.
தோழர் இலக்குவன் நினைவு கொடி பயணம்
தோழர் பி.இலக்குவன் நினைவு செங்கொடி பயண துவக்க கூட்டம் கீழவெளியூர் கடைவீதியில் நடை பெற்றது. துவக்க கூட்டத்திற்கு கட்சியின் தோகைமலை ஒன்றிய செயலாளர் ஏ.பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராஜூ மாநாட்டில் ஏற்றுவதற்காக தோழர் பி.இலக்கு வன் நினைவு செங்கொடியை எடுத்து கொடுத்து கொடி பயணத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சக்திவேல் வாழ்த்திப் பேசி னார். மாவட்ட குழு உறுப்பினர் இளங்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக் ்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர். இக்கொடி பயணத்திற்கு தோகைமலை பேருந்து நிலையம் முன்பு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. போக்குவரத்து சங்க கிளை சார்பில் கரூர் மண்டல போக்கு வரத்து பணிமனை முன்பு வர வேற்பு கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து சங்க கிளை செயலா ளர் ஆர்.கே.ரமேஷ் தலைமை வகித்தார். போக்குவரத்து சங்க கிளை செயலாளர் சிறுமன்னன் வாழ்த்தி பேசினார். மாநாடு நடைபெறும் கடவூர் ஒன்றிய எல்லையான மைலம்பட்டி கடைவீதியில் தோழர்கள் து.ரா. பெரியதம்பி நினைவு ஜோதி பய ணத்திற்கும், பி.இலக்குவன் நினைவு கொடி பயணத்திற்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு குழு கூட்டத்திற்கு கட்சி யின் கடவூர் ஒன்றிய செயலாளர் எம்.பழனிவேல் தலைமை வகித் தார். மாவட்ட குழு உறுப்பினர் பி. ராமமூர்த்தி சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வேல் முருகன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தரகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு செந்தொண்டர் பேரணி துவங்கி மாநாடு நடைபெறும் மண்டபத்தில் நிறைவடைந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.அன்னகாமாட்சி பேரணியை துவக்கி வைத்தார். கட்சியின் முதுபெரும் தலைவர் புதுவாடி மாணிக்கம் மாநாட்டு திடலில் செங்கொடியை ஏற்றி வைத்தார். தோழர் பி.இலக்குவன் நினைவு கொடியை கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு பெற்றுக் கொண்டார். து.ரா.பெரியதம்பி நினைவு ஜோதியை மாநிலக் குழு உறுப்பி னர் எஸ்.ஸ்ரீதர் பெற்றுக் கொண்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். கரூர் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஜீவானந்தம், எம்.ஜோதிபாசு, கே.சக்திவேல், பி.ராஜு, சி.முரு கேசன், வரவேற்புக்குழு தலைவர் பி.ராமமூர்த்தி, வரவேற்புக் குழு செயலாளர் பி.பழனிவேல், பொரு ளாளர் பி.வேல்முருகன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள் செந் தொண்டர் பேரணியில் கலந்து கொண்டனர்.