வேம்மங்குடி சுடுகாட்டு சாலையை செப்பனிடுக!: சிபிஎம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, டிச.3 - வேம்மங்குடி மேற்கு ஊராட்சியில் சுடுகாட்டுக்குச் செல்லும் பழுதடைந்த சாலையை செப்பனிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியப் பேரவைக் கூட்டம் ஒன்றியக்குழு உறுப் பினர் ராஜா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிவண்ணன் ஆகியோர் பேசினர். தமிழ்நாடு அரசு மின்சாரத்திற்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். வேம்மங்குடி மேற்கு ஊராட்சியில் சுடுகாட்டுக்குச் செல்லும் பழுதடைந்த சாலை மற்றும் கீரமங்கலத்திலிருந்து வேம்மங்குடி செல்லும் பழுதடைந்த சாலையை செப்பனிட வேண்டும். மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதி யான பயனாளிகள் அனைவரையும் சேர்க்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தில் வருடத்திற்கு நூறு நாள் வேலையும், நிர்ணயிக்கப்பட்ட கூலியும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் துவக்கி வைப்பு
புதுக்கோட்டை, டிச.3 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தக் கோட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெற்ற கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், புதுக்கோட்டையில் 14 அரசு மருத்துவமனைகளும், 10 தனியார் மருத்துவ மனைகளும், 2 நோய் கண்டறியும் பரிசோதனை மையங்க ளும் செயல்படுகின்றன. மேலும் இத்திட்டம், பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதின ரும் பயன்பெறத்தக்க வகையில் அமைந்துள்ளது. இதன்கீழ் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது” என்றார்.
வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
பாபநாசம், டிச.3 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வழக்கறிஞர்கள் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் தலைவராக பாஸ்கரன், துணைத் தலைவராக கம்பன், செயலாளராக இளையராஜா, பொருளாளராக பாலச் சந்திரன் ஆகியோர் தேர்வாகினர். தமிழ்நாடு, பாண்டிச் சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலு, கார்த்திக்கேயன் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இதில் வழக்கறிஞர்கள் பலர் பங்கேற்றனர்.
இலவச மருத்துவ முகாம்கள்
தஞ்சாவூர், டிச.3- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை - வெட்டிக் காடு சீரடி சாய்பாபா ஆலயம் அருகில் பட்டுக்கோட்டை கிங்ஸ் நண்பர்கள் மற்றும் நாமக்கல் இமயம் மருத்து வமனை சார்பில், இலவச மூட்டு தேய்மான பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, லயன்ஸ் எம்.எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். கிங்ஸ் நண்பர்கள் சங்கத் தலைவர் செல்லக்கண்ணு வரவேற்றார். செயலாளர் ஆர்.என்.பாலாஜி மருத்துவ முகாம் குறித்து பேசினார். நாமக்கல் இமயம் மருத்துவமனை மருத்துவர்கள் நோயா ளிகளை பரிசோதித்து மருத்துவ ஆலோசனை வழங்கி னர். பொருளாளர் தீபன் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இம்முகாமில் 565 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்ற னர். மேல் சிகிச்சைக்காக 35 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் பேராவூரணி ஒன்றியம், மேல ஒட்டங்காட்டில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகா மிற்கு பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் அருள் தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் தீபா தலை மையிலான, மருத்துவக் குழுவினர் நூற்றுக்கணக்கான பொதுமக்களை பரிசோதித்து சிகிச்சையும், காய்ச்சல் தடுப்பு மருத்துவ ஆலோசனையும் வழங்கினர். முகா மில், ஒட்டங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாக் கண்ணு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திர சேகரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்ட னர்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி
தஞ்சாவூர்/அறந்தாங்கி, டிச.3- ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கநிலை ஆசிரியர்களுக் கான ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. 1 முதல் 3 ஆம் வகுப்புகள் வரை கையாளும் ஆசிரியர் களுக்கான பயிற்சி பேராவூரணி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 4, 5 வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 175-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியை தலைமை ஆசிரியர்கள் தனலட்சுமி, மாரிமுத்து ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம், வட்டார கல்வி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, கலாராணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் ஆகி யோர் பயிற்சியின் நோக்கம் பற்றி கூறினர். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் - ஐயங்களும் தீர்வுகளும் தொடர்பான குறுவள மைய பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் இந்திராணி தொடங்கி வைத்தார். இதேபோல் அரசு உயர்நிலைப் பள்ளி கிருஷ்ணா ஜிப்பட்டினம், அரசு மேல்நிலைப்பள்ளி கோட்டைப்பட்டி னம் மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி கோட்டைப் பட்டினம் ஆகிய மையங்களில் நடைபெற்ற பயிற்சியில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை- திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலின் நேரம் மாற்றம்
திருநெல்வேலி டிச.3- தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு முன்கூட்டியே சென்றடையும். அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு வழக்கம் போல் வந்தே பாரத் ரயில் புறப்படும். இந்த ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு இரவு 7.46 மணிக்கு வருகை தந்து 7.48 மணிக்கு புறப்படும், மதுரை ரயில் நிலையத்திற்கு 8.30 மணிக்கு வருகை தந்து 8.35 மணிக்கு புறப்படும். விருதுநகருக்கு 9.03 மணிக்கு வருகை தந்து 9.05 மணிக்கு புறப்படும். ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ரயில் இயக்க நேரத்தில் இருந்து தற்போது 10 நிமிடம் முன்னதாக சென்றடையும். இதேபோல, தாம்பரம், விழுப்புரம், திருச்சி, நெல்லை ரயில் நிலையங்களுக்கு ஏற்கனவே உள்ள வழக்கமான நேரத்தில் ரயில் சென்றடையும். இதில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த புதிய கால அட்டவணை டிச.1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கால்நடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
பாபநாசம், டிச.3 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “பாபநாசம் பேரூ ராட்சிப் பகுதியில் வசிக்கும் கால்நடைகள் வளர்ப் போர், தங்களுக்குச் சொந்த மான கால்நடைகளை பொது மக்களுக்கு இடையூறின்றி பராமரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்ப டும் வகையில், சாலைகள் மற்றும் பொது இடங்களில் கால்நடைகளை திரியவிடும் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்கப் படுவதுடன், சட்ட நடவ டிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறையில் தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படை
நாகப்பட்டினம், டிச.2- மிக்ஜம் புயலால் காவிரி டெல்டா மாவட்டங் களில் கனமழை பெய்யும் என்பதால், மீன வர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறி வுறுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, மயிலாடு துறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, கொள்ளிடம், மணல்மேடு, செம்பனார்கோ வில், தரங்கம்பாடி, சீர்காழி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் ஞாயிறு மாலை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. புயல் பாதிப்பை சமாளிக்க மயிலாடு துறை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு பேரிடர் மீட்புத்துறையினர் ஏ.சுசைராஜ் (9498112079) தலைமையில் 27 பேர் நாகப்பட்டினம் வளிவலம் தேசிகர் கல்லூரியில் தயார் நிலை யில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் பி.பிரபா கர் (9498106566) தலைமையிலான 30 பேர், தரங்கம்பாடியில் உள்ள ரேணுகாதேவி மகாலிலும், டிஆர்.ரவி (9498114228) தலை மையிலான 27 பேர் சீர்காழி ராஜேஸ்வரி மகாலிலும் தயார் நிலையில் உள்ளனர். உணவுப் பொருட்கள், தண்ணீர், பால், மருந்து மற்றும் பிற அத்தியாவசியப் பொருட் களை சில நாட்களுக்கு இருப்பு வைக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டார்ச் லைட், எமர்ஜென்சி லைட், தீப் பெட்டிகள், பேட்டரிகள், முதலுதவி பொருட் கள் போன்றவற்றையும் இருப்பு வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
சொத்து குவிப்பு வழக்கு டிச.20-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை, டிச.3 - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீதான சொத்து குவிப்பு வழக்கின் விசாரணை டிச.20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார். இந்தக் காலங்களில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விஜயபாஸ்கர் மீதான சொத்துகள் குறித்து போலீசார் தாக்கல் செய்த ஆவணங்களின் நகலை கேட்டு, அவரது மனைவி ரம்யாவும், ரம்யா மீதான சொத்து ஆவணங்களின் நகலை கேட்டு விஜயபாஸ்கரும் ஏற்கனவே மனு செய்திருந்தனர். சுமார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த ஆவணங்களை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் சனிக்கிழமை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவை, விஜயபாஸ்கர் மற்றும் ரம்யா தரப்பு வழக்குரைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை டிச.20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூரண ஜெயஆனந்த் உத்தரவிட்டார்.
யு.ஜி.சி நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மண்டல் கமிசன் பரிந்துரைகளை அமல்படுத்துக!
ப.மாணிக்கம் தாகூர் எம்.பி பிரதமருக்கு கடிதம்
விருதுநகர், டிச.3- நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களில் மண்டல் கமிசன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என ஒன்றிய பிரதமர் மோடிக்கு விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் கடிதம் அனுப்பி யுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில், குறிப்பாக விஐடி, அமிர்தா, எஸ்ஆர்எம் மற்றும் பிட்ஸ் போன்ற நிறுவனங்களில் எஸ்சி/எஸ்டி/ஓபிசி சமூ கங்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான மிக முக்கிய மான விஷயத்தை கூற விரும்புகிறேன். யுஜிசி யின் 14-வது பிரிவு பல்கலைக்கழ கங்களாகக் கருதப்படும் நிறுவனங்கள் விதிமுறைகள் 2019-ன் படி, அரசியலமைப்புச் சட்டப்படி கட்டாய இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளைச் செயல்படுத்துவது நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு கட்டாயமாகும். இந்நிறுவனங்கள் இந்தக் கடமையை நிறை வேற்றத் தவறிவிட்டன. இதற்கான ஆதாரங்கள் இந்த கடிதத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் விரிவான பட்டியல், கிடைக்கும் தரவுகளின்படி, யுஜிசி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள இட ஒதுக்கீடு கொள்கைகளை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. குறிப்பாக இந்த நிறுவனங்களில் உள்ள பட்டியல், பழங்குடியின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் குறைவான பிரதிநிதித்துவத்தை நிவர்த்தி செய்வதற்கான அவசரத்தை எடுத்துக்காட்டு கிறது. இந்த சமூகங்களின் குறைவான பிரதிநிதித்து வம் இந்த நிறுவனங்களுக்குள் உள்ள பன்முகத்தன்மை யைத் தடுப்பது மட்டுமல்லாமல் சமூக ஏற்றத்தாழ்வு களை நிலைநிறுத்துகிறது. எனவே, நமது தேசத்தின் பன்முகத்தன்மையை உறுதிப்படுத்த, யுஜிசி விதி முறைகளின்படி, இட ஒதுக்கீட்டுக் கொள்கைகளை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அவசியம் கடைப் பிடிப்பதை உறுதிசெய்திட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.