திருச்சிராப்பள்ளி, மே 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட ஒன்றியக்குழு சார்பில் தா.பேட்டையில் கட்சி நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சின்னதுரை ஆகியோர் சிறப்புறையாற்றினர். கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரையிடம் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1.50 லட்சத்தை மாவட்டக் குழு உறுப்பினர் சந்திரமோகன், மாற்றுத்திறனாளி சங்க மாவட்டப் பொருளாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.