திருத்துறைப்பூண்டி, ஜன.22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக்குழு சார்பில் ஆண்டு கட்சி நிதி வழங்கும் பேரவை விழா திருத்துறைப்பூண்டி சிங்களாந்தியில் கட்சி யின் நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.சாமிநா தன் முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, பொது மக்களி டம் திரட்டப்பட்ட கட்சி நிதி முதல் தவணை யாக ரூ. 1,50,000-ஐ பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.ஜோதிபாசு, டி.முருகையன், மாவட்ட குழு உறுப்பினர் டி.சுப்ரமணியன், சிஐடியு மாவட்ட பொருளா ளர் எம்.பி.கே.பாண்டியன், நகர குழு உறுப்பி னர்கள் கே.கோபு, எஸ்.தண்டபாணி, எம். ஜெயபிரகாஷ், சி.சிவசாகர், என்.கோதாவரி, தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நகர பொறுப் பாளர் ஆர்.எம். சுப்ரமணியன், கிளை செயலா ளர்கள் நடராஜன், ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.