districts

img

திருச்சியில் சிபிஎம் தேர்தல் நிதியளிப்பு கூட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 16 - மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் நாடாளு மன்றத் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ரெங்கரா ஜன் வரவேற்றார். கூட்டத் தில் மத்தியக் குழு உறுப்பி னர் அ.சவுந்தரராசன், மாநி லக் குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி செயலாளர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசனிடம் நாடாளுமன்ற தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மேற்கு பகுதி செயலாளர் எம்.ஐ. ரபீக் அஹமத் நன்றி கூறி னார்.