districts

பங்குச்சந்தை ஊழல், சிஏஜி அறிக்கையால் அம்பலப்பட்டு நிற்கிறார் பிரதமர் மோடி

தஞ்சாவூர், செப்.1-   பாஜக மோடி அரசை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கரந்தை ஒன்றியக்குழு சார்பில்  கரந்தை கடைவீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. பிரச்சாரத்திற்கு டி.ஜோதிமணி தலைமை வகித்தார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி  பங்கேற்று, மறியல் விளக்க பிரச்சார  துண்டுப் பிரசுரத்தை பொதுமக்க ளுக்கு வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:  ‘ஒன்றிய மோடி அரசே, வேலை  கொடு, விலையைக் குறை’ என்ற  முழக்கத்தை முன்வைத்து செப்டம் பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை பிரச் சார இயக்கம் மேற்கொள்ளப்படு கிறது. இதையொட்டி, செப்.7 அன்று தஞ்சை மாவட்டம் முழு வதும் 14 இடங்களில் மறியல் போ ராட்டம் நடத்தப்பட உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு வேலை கொடுப்பதற்கான ஏற்பாடு களை அரசாங்கம் செய்ய வேண்டும். இருக்கும் வேலைகளை சமூகப்  பாதுகாப்புடன் கூடிய வேலைகளாக மாற்ற வேண்டும். ஒன்றிய அரசு அலு வலகங்களில் 10 லட்சம் காலிப் பணி யிடங்களும், ரயில்வேயில் 2 லட்சத்து  20 ஆயிரம் காலிப் பணியிடங்களும் உள்ளன. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  கிராமப் புறங்களில் நூறு நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மூன்றில் ஒரு பங்காக ஒன்றிய அரசு  குறைத்துள்ளது. ஏற்கனவே 40 -  42 நாள்தான் சராசரியாக வேலை கிடைக்கிறது. அதை இன்னும் குறைக்கிறது ஒன்றிய அரசு. கிராமப் புறப் பெண்களுக்கு ஒரு கவுரவமான வேலையை தரும் நூறு நாள் வேலையை பலப்படுத்த வேண்டும். 

விலைவாசி உயர்வுக்கு அரசு  பின்பற்றுகிற தவறான கொள்கை களே காரணம். சர்வதேச சந்தையில்  எரிபொருட்கள் விலை குறைவாக இருந்தாலும், ஒன்றிய அரசு வரிக்கு  மேல் வரி போட்டுக் கொண்டிருப்ப தால், எரிபொருள் விலை உயர்ந்து ஒட்டுமொத்த பொருட்களின் விலை  உயர்வுக்கும் காரணமாக அமை கிறது. பிரிட்டிஷ் அரசுக்கு பிறகு உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி போடுவது மோடி தலைமையி லான ஆட்சிதான். கார்ப்பரேட் களுக்கு பல லட்சம் கோடி வரி தள்ளு படி, வரிச் சலுகை, கடன் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.  அண்மையில் பிரதமர் மோடி கிரீஸ் நாட்டிற்குச் சென்றார். அங்கு உள்ள துறைமுகத்தில் அரசு முதலீடு செய்ய ஆர்வம் காட்டு கிறது என்று தெரிவித்தார். ஏற்கனவே  கௌதம் அதானி கிரீஸ் நாட்டில்  இரு துறைமுகங்களை குத்தகைக்கு  எடுக்க தயாராக இருப்பதாக தெரி வித்தார். அதாவது, அதானியின் கோரிக்கையை, பிரதமர் மோடி கிரீஸ்  நாட்டு அரசாங்கத்திடம் முன்வைத்துள் ளார். பிரதமர் மோடி மக்களின் கோரிக் கையை கவனிக்க மறுக்கிறார். அதானி-அம்பானியின் கோரிக்கை க்கு செவிசாய்க்கிறார். இந்த அரசு மக்களுக்கான அரசாக இல்லை.  பங்குச் சந்தையில் ஊழல் நடந்தி ருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மோடி தானும் ஊழல்  செய்ய மாட்டேன், மற்றவர்களை யும் ஊழல் செய்ய விடமாட்டேன் என்று அடிக்கடி சொல்வார்.

தற்போது சிஏஜியின் அறிக்கையில், ஒன்றிய அரசு திட்டங்களில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந் திருப்பதாக செய்தி வெளியாகி யுள்ளது. இதற்கு மோடி கண்டிப் பாக பதில் சொல்ல வேண்டும்.  அதானியின் பங்குச்சந்தை மோசடி குறித்து ஏற்கனவே ஹிண்டன் பெர்க், தற்போது ஓசிஜிஆர்க் நிறு வனம் என, பங்குச் சந்தை மோசடி யில் ஈடுபட்டவர்கள் பெயர்களை குறிப்பிட்டு அறிக்கை வெளியிடப்பட் டுள்ளது. இன்று வரை ஒன்றிய அரசு இதுகுறித்து வாய் திறக்க வில்லை. இதுகுறித்து முறையான விசாரணை நடத்தி அதானி மட்டு மல்ல; அதற்கு துணை போன பிரத மர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்க  வேண்டும். தான் ஊழலுக்கு அப்பாற் பட்டவர் என்ற ஒரு பிம்பத்தை மோடி கட்டமைத்து இருந்தார்.  இப்போது அதானி பங்குச்சந்தை ஊழல் குறித்து அடுத்தடுத்த தக வல்கள் வெளிவரும் போதும், சிஏஜி  அறிக்கையினாலும், அவரது பிம்பம்  உடைந்து அம்பலப்பட்டு நிற்கிறார். மதத்தைச் சொல்லி மக்களை திசை திருப்புகிற ஆர்எஸ்எஸ்-பாஜக வின் சதி வேலைகள் புரிந்து கொள்ளப் பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரத்தில், மூத்த தோழர் என். சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.