மதுரை, மார்ச் 25- திமுக தலைமையிலான ‘இந் தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாள ராக போட்டியிடும் சு.வெங்க டேசன் திங்களன்று தோழமைக் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமய பெரியோர்களை சந்தித்து ஆத ரவு திரட்டினார். மதுரை-இராமநாதபுரம் டயோ சில் (சிஎஸ்ஐ) பிஷப் டாக்டர் ஜெய் சிங் பிரின்ஸ் பிரபாகர், மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் தலைவர் அல்ஹாஜ் எஸ்.ஏ.லியாக்கத்அலி, அண்ணா திராவிட மக்கள் முன் னேற்ற கழகம் பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் ஆகி யோரை நேரில் சந்தித்து பொன் னாடை போர்த்தி ஆதரவு கோரி னார். நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட் டச் செயலாளர் மா.கணேசன், துணை மேயர் தி.நாகராஜன், சிறு பான்மை நலக்குழு மாவட்ட தலை வர் கே.அலாவுதீன், மாவட்டச் செயலாளர் என்.கணேசமூர்த்தி, பொருளாளர் எம்.ஜான்சன், மேற்கு தொகுதி பொறுப்பாளர் இரா. லெனின், பகுதிக் குழு செயலா ளர் கு.கணேசன் மற்றும் பகு திக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.