திண்டுக்கல், மார்ச் 29- ‘இந்தியா’ கூட்டணி திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் திண்டுக்கல்லில் தவ்ஹீத் ஜமாத் தலைவர்களை அவர்களது அலுவலகத் தில் புதனன்று சந்தித்து வாக்குச் சேக ரித்தார். அப்போது, தவ்ஹீத் ஜமாத் தலைவர்களிடம் சிறுபான்மை மக்களின் நலங்களுக்காக தொடர்ந்து குரல் எடுத்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளரான ஆர்.சச்சிதானந்தமாகிய எனக்கு அரி வாள் நட்சத்திரத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தவ்ஹீத் ஜமாத் தலைவர்கள் சால்வை அணிவித்து அன்பை வெளிப்படுத்தினர்.